டில்லி : மத்தியில் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா தற்போது ஜூன் 08ம் தேதிக்கு பதில் ஜூன் 09ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 294 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக.,விற்கு பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமாரும், ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் ஆதரவு அளிப்பதாக கூறி உள்ளனர். இதனால் மத்தியில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. மீண்டும் இந்தியாவின் பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு உலக தலைவர்கள் பலரும் போனில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

பிரதமர் மோடி, ஜூன் 08ம் தேதி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இதனால் புதிய அமைச்சரவையில் யாருக்கு எந்த துறை ஒதுக்குவது என்பது தொடர்பாக டில்லியில் பாஜக முக்கிய தலைவர்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் கூடி ஆலோசித்து வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா ஜூன் 08ம் தேதிக்கு பதில், தற்போது ஜூன் 09ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய மத்திய அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வதில் இன்னும் இழுபறியான நிலையே இருந்து வருதாம். அமைச்சரவை பட்டியல் இறுதி செய்ய முடியாததால் பதவியேற்பு விழாவை ஒரு நாள் தள்ளி வைத்துள்ளார்களாம். அது மட்டுமல்ல மோடியின் பதவியேற்பு விழாவில் வங்கதேச பிரதமர், நேபாள பிரதமர் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளார்களாம். இன்னும் 2 நாட்களில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்வது கடினம் என்பதாலும் மோடியின் பதவியேற்பு விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}