போலி வாக்காளர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறதா திமுக அரசு?... நயினார் நாகேந்திரன்!

Nov 11, 2025,05:06 PM IST

சென்னை: போலி வாக்காளர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறதா திமுக அரசு? என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில், போலி வாக்காளர்களைக் கண்டறியும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தப் பணியைக் கண்மூடித்தனமாக எதிர்த்து வரும் அரசு, தமிழகத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி SIR பணிகளை முடக்க முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


அதாவது பல மாநில மக்கள் வசித்து வரும் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் தமிழில் மட்டுமே வாக்காளர் படிவங்கள் வழங்கப்படுவதாகவும், 40 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ள சென்னையில் படிவங்கள் பற்றாக்குறையால் இதுவரை 6.4 லட்சம் படிவங்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், சில வாக்குச்சாவடி ஊழியர்கள் ஒரே நாளில் 500 வீடுகளுக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தால் வாட்ஸ்ஆப் மூலம் படிவங்கள் அனுப்பப்படுவதாகவும், படிவங்களை நிரப்பத் தெரியாமல் சிரமப்படும் முதியவர்கள் மற்றும் பாமர மக்களுக்கு ஊழியர்கள் உதவுவதில்லை எனவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுகின்றன.




அதிலும் குறிப்பாக அரசு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாகத் திமுக தொண்டர்களும், திமுகவிற்கு விசுவாசமாக இருப்பவர்களும் நியமிக்கப்படுவதால் இந்தப் பணி நேர்மையாக நடக்குமா என்ற சந்தேகமும் மக்கள் மனதில் வலுக்கத் துவங்கியுள்ளது. ஓட்டுக்குப் பணம் கொடுப்பதிலும் போலி வாக்குகள் போடுவதிலும் பெயர் போன திமுகவின் இந்தத் தில்லுமுல்லுகளால் தங்கள் ஓட்டுரிமை பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் வாக்குச்சாவடி அலுவலர்களை முற்றுகையிடத் துவங்கியுள்ளனர்.


எனவே, இந்த விஷயத்தில் உடனடியாகத் தமிழகத் தேர்தல் கமிஷன் தலையிட்டு, தமிழகத்தில் நடந்துவரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியைப் பார்வையிட சிறப்புக் குழுவை நியமிக்க வேண்டும் எனவும், அரசு அதிகாரிகளையும் நடுநிலையானவர்களையும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாகப் பணியமர்த்த வேண்டுமெனவும் தமிழக பாஜக சார்பாக வேண்டுதல் விடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்