சென்னை: போலி வாக்காளர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறதா திமுக அரசு? என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில், போலி வாக்காளர்களைக் கண்டறியும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தப் பணியைக் கண்மூடித்தனமாக எதிர்த்து வரும் அரசு, தமிழகத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி SIR பணிகளை முடக்க முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது பல மாநில மக்கள் வசித்து வரும் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் தமிழில் மட்டுமே வாக்காளர் படிவங்கள் வழங்கப்படுவதாகவும், 40 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ள சென்னையில் படிவங்கள் பற்றாக்குறையால் இதுவரை 6.4 லட்சம் படிவங்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், சில வாக்குச்சாவடி ஊழியர்கள் ஒரே நாளில் 500 வீடுகளுக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தால் வாட்ஸ்ஆப் மூலம் படிவங்கள் அனுப்பப்படுவதாகவும், படிவங்களை நிரப்பத் தெரியாமல் சிரமப்படும் முதியவர்கள் மற்றும் பாமர மக்களுக்கு ஊழியர்கள் உதவுவதில்லை எனவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

அதிலும் குறிப்பாக அரசு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாகத் திமுக தொண்டர்களும், திமுகவிற்கு விசுவாசமாக இருப்பவர்களும் நியமிக்கப்படுவதால் இந்தப் பணி நேர்மையாக நடக்குமா என்ற சந்தேகமும் மக்கள் மனதில் வலுக்கத் துவங்கியுள்ளது. ஓட்டுக்குப் பணம் கொடுப்பதிலும் போலி வாக்குகள் போடுவதிலும் பெயர் போன திமுகவின் இந்தத் தில்லுமுல்லுகளால் தங்கள் ஓட்டுரிமை பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் வாக்குச்சாவடி அலுவலர்களை முற்றுகையிடத் துவங்கியுள்ளனர்.
எனவே, இந்த விஷயத்தில் உடனடியாகத் தமிழகத் தேர்தல் கமிஷன் தலையிட்டு, தமிழகத்தில் நடந்துவரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியைப் பார்வையிட சிறப்புக் குழுவை நியமிக்க வேண்டும் எனவும், அரசு அதிகாரிகளையும் நடுநிலையானவர்களையும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாகப் பணியமர்த்த வேண்டுமெனவும் தமிழக பாஜக சார்பாக வேண்டுதல் விடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!
திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்
ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!
சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)
ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)
கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க
வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!
தாயன்பு !
All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!
{{comments.comment}}