டெஹரான்: இஸ்ரேல் விமானப்படை, வெள்ளிக்கிழமையன்று ஈரான் மீது திடீர் தாக்குதல் நடத்தி அதிர வைத்துள்ளது. ஈரானின் அணு உலை மற்றும் இராணுவ தளங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன.
வெள்ளிக்கிழமை காலை ஈரானிய தலைநகரில் குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்தது. மேலும், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் "100 சதவீதம் இயக்கத் திறனில்" இருந்ததாகவும் அது குறிப்பிட்டது.
ஈரான் பதில் தாக்குதலில் ஈடுபடலாம் என்பதால், இஸ்ரேல் முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறுகையில், இஸ்ரேல் அரசின் முன்கூட்டிய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் அரசு மற்றும் அதன் குடிமக்கள் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல் எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
இஸ்ரேலின் தாக்குதல்களால் கச்சா எண்ணெய் விலைகள் 6 சதவீதம் வரை உயர்ந்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான், இஸ்ரேலைத் தாக்கும் சாத்தியம் இருப்பதாக முன்னதாக எச்சரித்திருந்தார். இதையடுத்தே ஈரான் முந்திக் கொண்டு தாக்கியுள்ளது.
அதேசமயம், ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் அமெரிக்காவுக்கு எந்தவிதப் பங்கும் இல்லை என்று அமெரிக்கா விளக்கியுள்ளது. அமெரிக்கா மீது ஈரான் தாக்க முயலக் கூடாது என்றும் அது எச்சரித்துள்ளது.
3I/ATLAS.. சூரியனை நோக்கி வரும் மர்மப் பொருள்.. வேற்றுகிரக விண்கலமா.. பூமிக்கு ஆபத்தா?
வரலாற்றுப் பிழை செய்து விட்டார் ஜெயலலிதா.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சால் பரபரப்பு!
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
1967,1977 தேர்தலைப் போல 2026 தேர்தலும் முக்கியமானதாக அமையும்: தவெக தலைவர் விஜய்!
மை டிவிகே... உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்தார்... தவெக தலைவர் விஜய்!
நீதி தவறிய செயலுக்காக முதல்வர் தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
ரஷ்யாவில் கடும் நிலநடுக்கம்.. ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சுனாமி அலை தாக்குதல்!
கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் தாக்கு!
Honeymoon in Shillong: மேகாலயா தேனிலவு கொலை சம்பவம் சினிமா ஆகிறது!
{{comments.comment}}