state of war : உச்ச கட்ட பதற்றத்தில் இஸ்ரேல்...போர் அறிவிப்பு வெளியீடு

Oct 07, 2023,01:23 PM IST

ஜெருசலேம் : இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே நிலவி வரும் மோதல் தற்போது போராக மாறி உள்ளது. இஸ்ரேலின் பல்வேறு நகரங்கள் மீது பாலஸ்தீனம் குண்டு மழை பொழிந்து வருகிறது.


இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. தற்போது இது போராக மாறி உள்ளது. இஸ்ரேலும் போரை அறிவித்துள்ளது. இஸ்ரேலின் பல நகரங்களின் மீது 20 நிமிடங்களில் 5000 ராக்கெட்களை  காசா முனையில் இருந்து பாலஸ்தீனம் ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலுக்குள் நுழைந்துள்ள பாலஸ்தீனிய ஆயுதக் குழுவினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்கள் கண்மூடித்தனமாக சுட்டதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். 




பாலஸ்தீனத்தின் இந்த திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேல் பாதுகாப்பு படையினரும் களத்தில் இறங்கி அதிரடியாக பதிலடி கொடுக்க துவங்கி உள்ளனர்.  போரை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக தற்போது இஸ்ரேல் பகிரங்கமாக அறிவித்துள்ளது. 


இஸ்ரேலுக்கும் - பாலஸ்தீனத்திற்கும் இடையே உள்ள காசா பகுதி தான் இரு நாடுகள் இடையேயான போருக்கு காரணம். தன்னாட்சி பெற்ற பகுதியாக உள்ள காசா, ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக இஸ்ரேல் கருதுகிறது. இந்த அமைப்பினர் தான் பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இவர்களுக்கு தேவையான நிதி உதவிகளை ஈரான் செய்து வருவதாகவும் இஸ்ரேல் கூறி வருகிறது. 


அதே சமயம் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருவுதாகவும், அமெரிக்காவின் ஆதரவுடன் காசாவை கைப்பற்ற இஸ்ரேல் முயற்சி செய்து வருவதாகவும் பாலஸ்தீனம் குற்றம்சாட்டி வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி குற்றம்சாட்டிக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த மோதல் போராக மாறி உள்ளது. இதனால் காசா பகுதி மக்கள் உயிர் பயத்தில் உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்