இஸ்ரேல் தாக்குதல் : ஈரானில் இருந்து வெளியே முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள்

Jun 14, 2025,06:21 PM IST

டெஹ்ரான்: ஈரான் நாட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் அங்குள்ள இந்திய மாணவர்கள் அவதிப்படுகிறார்கள். அவர்களை மீட்கும்படி இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


இஸ்ரேல், ஈரான் மீது "Operation Rising Lion" என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரானில் பதற்றம் நிலவுகிறது. இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக இருந்தாலும், பயத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். தங்களை மீட்கும்படி இந்திய அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இஸ்ரேல், ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு திட்டத்தை தடுத்து நிறுத்த தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.


ஈரானில் ஏராளமான இந்திய மாணவர்கள் தங்கியுள்ளனர். அவர்கள் தற்போது பெரும் பதட்டத்தில் உள்ளனர். காஷ்மீரை சேர்ந்த தபியா ஜஹ்ரா என்ற மாணவி தெஹ்ரான் மருத்துவ பல்கலைக்கழகத்தில் MBBS படிக்கிறார். அவர் கூறுகையில், "நாங்கள் பாதுகாப்பாக தான் இருக்கிறோம். ஆனால் பயமாக இருக்கிறது. அதிகாலை 3:30 மணிக்கு தாக்குதல் நடந்தது. நிலம் நடுங்குவது போல் இருந்தது. இது மிகவும் கவலையளிக்கும் அனுபவமாக இருந்தது" என்றார். பல்கலைக்கழக அதிகாரிகள் அமைதியாக இருக்கும்படி கூறியுள்ளனர். ஆனால் எந்த பகுதி பாதுகாப்பானது என்று தகவல் எதுவும் தரவில்லை. இணையதள சேவை துண்டிக்கப்பட்டதால் தகவல் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறினார்.




உத்தரபிரதேசத்தை சேர்ந்த அலிஷா ரிஸ்வி என்ற மாணவி கூறுகையில், "எங்கள் முகவரி மற்றும் விவரங்களை embassy கேட்டிருக்கிறார்கள். தேவைப்பட்டால் எங்களை மீட்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள்" என்றார். இரண்டு மாணவிகளும் 2023-ல் தான் ஈரான் சென்றுள்ளனர். தெஹ்ரானில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம், வெளியுறவுத்துறை அமைச்சர் Dr. S. ஜெய்சங்கரை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளது. 


ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தை குறைத்தால், அமெரிக்கா பொருளாதார தடைகளை நீக்க தயாராக இருந்தது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு  பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மீது டிரோன்களை ஏவியது. தொடர்ந்து தாக்குதல் நடந்து வருவதால் பதட்டமும் தணிவதாக தெரியவில்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

WTC 2025 Finals: உலக டெஸ்ட் சாம்பியன் தென் ஆப்பிரிக்கா.. ஆஸ்திரேலியாவை வச்சு செய்து அபாரம்!

news

Dubai fire: துபாய் .. 67 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. உயிர் அபாயம் ஏதுமில்லை

news

இஸ்ரேல் தாக்குதல் : ஈரானில் இருந்து வெளியே முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள்

news

சரமாரியான தாக்குதலால்.. தீவிரமடையும் இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் .. இந்தியா யார் பக்கம்?

news

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம்.. பயணங்கள் தாமதமாகலாம் or ரத்தாகலாம்.. இண்டிகோ தகவல்

news

ஏர்இந்தியா விமான விபத்து பற்றி 3 மாதங்களுக்குள் விசாரிக்கப்படும் - அமைச்சர் ராம் மோகன் நாயுடு

news

ஏர் இந்தியா விமான விபத்து ஒரு சைபர் தாக்குதலா?... சந்தேகம் கிளப்பும் சிவசேனா !

news

இஸ்ரேல் தாக்குதலில் பலியான முப்படைத் தளபதி.. புதிய ராணுவ தளபதியை அறிவித்த ஈரான்

news

பற்றி எரியும் மத்திய கிழக்கு.. அனல் பறக்கும் சண்டையில் இஸ்ரேல் - ஈரான்.. மக்கள் பரிதவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்