இன்சாட் 3டிஎஸ் செயற்கைக் கோளுடன்.. பிப். 17ல் விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி ராக்கெட்!

Feb 10, 2024,05:16 PM IST
சென்னை: வானிலை ஆய்வுகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இன்சாட் 3 டிஎஸ் செயற்கைக் கோள், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வரும் 17ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

வானிலை முன்னறிவிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை ஆய்வுகளுக்காக இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.  வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக இந்த இன்சாட் வகை செயற்கைக் கோள்கள் செலுத்தப்பட்டு வருகின்றன. 16 வது முறையாக ஜி எஸ் எல் வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய கடல்சார் ஆய்வு மையம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இந்த செயற்கைக்கோள் தகவல்கள் மூலம் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயற்கைக்கோளில் ஆறு சேனல் இமேஜர்கள் உட்பட 25 ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் புவியின் பருவநிலை மாறுபாடுகளை நுட்பமாக கண்காணித்து வானிலைக்கான தகவல்களை  துல்லியமாக வழங்கும்  என்று கூறப்படுகிறது.



புயல், கனமழை உட்பட இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளலாம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து வருகிற 17-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.  இன்சாட் செயற்கைக்கோள் பாகங்கள் மற்றும் இறுதி கட்ட சோதனைகள் பெங்களூரில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்தில் கடந்த மாதம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்