இன்சாட் 3டிஎஸ் செயற்கைக் கோளுடன்.. பிப். 17ல் விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி ராக்கெட்!

Feb 10, 2024,05:16 PM IST
சென்னை: வானிலை ஆய்வுகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இன்சாட் 3 டிஎஸ் செயற்கைக் கோள், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வரும் 17ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

வானிலை முன்னறிவிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை ஆய்வுகளுக்காக இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.  வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக இந்த இன்சாட் வகை செயற்கைக் கோள்கள் செலுத்தப்பட்டு வருகின்றன. 16 வது முறையாக ஜி எஸ் எல் வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய கடல்சார் ஆய்வு மையம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இந்த செயற்கைக்கோள் தகவல்கள் மூலம் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயற்கைக்கோளில் ஆறு சேனல் இமேஜர்கள் உட்பட 25 ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் புவியின் பருவநிலை மாறுபாடுகளை நுட்பமாக கண்காணித்து வானிலைக்கான தகவல்களை  துல்லியமாக வழங்கும்  என்று கூறப்படுகிறது.



புயல், கனமழை உட்பட இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளலாம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து வருகிற 17-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.  இன்சாட் செயற்கைக்கோள் பாகங்கள் மற்றும் இறுதி கட்ட சோதனைகள் பெங்களூரில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்தில் கடந்த மாதம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்