ஸ்ரீஹரிகோட்டா: PSLV C60 ராக்கெட் மூலம் விண்ணிற்கு அனுப்பப்பட்ட SpaDex திட்டத்தின் கீழான 2 செய்கைகோள்களும் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து விண்வெளியில் செயற்கை கோள் அல்லது விண்கலங்களை இணைக்கும் 4வது நாடாக இந்தியா சாதனை படைத்துள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைத் தொடர்ந்து இந்தியாவும் 2 செயற்கைகோள்களை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதற்கான ஆய்வில் தீவிரமாக இறங்கியது. இதன் தொடர்ச்சியாக, ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி ஆகிய இரு விண்கலன்கள் வடிவமைக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் பிஎஸ்எல்சி சி-60 என்ற ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டன. இந்த முயற்சி கடந்த வாரமே செயல்படுத்தப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் இணைப்புத் திட்டம் தள்ளிப்போனது.
கடந்த ஜனவரி 7ம் தேதி விண்ணில் இணையச்செய்வதற்கான திட்டம் கைவிடப்பட்ட நிலையில், (இன்று) ஜனவரி 16ம் தேதி இரண்டு செயற்கைகோள்களையும் விண்ணில் இணைக்கும் டாக்கிங் செயல்முறை செயல்படுத்தப்பட்டு வெற்றி பெற்றது. இந்த அறிவிப்பை இஸ்ரேல் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரோ எக்ஸ் தள பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், விண்கலன்களை இணையச் செய்யும் வரலாற்று நிகழ்வு வெற்றி பெற்றுள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து விண்வெளியில் டாக்கிங் செய்த 4வது நாடாக இந்தியா உருவாகியுள்ளது. இதன் மூலம் இந்தியா சாதனை படைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது, எதிர்காலத்தில் விண்வெளியில் விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான முயற்சிகளுக்கு மிகப் பெரிய உந்துதலாக இருக்கும் என்பது முக்கியமானது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!
இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!
கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்
வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!
தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!
SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி
ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?
{{comments.comment}}