விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் SSLV-D3 ராக்கெட்.. புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது EOS08!

Aug 16, 2024,07:30 PM IST

ஸ்ரீஹரிகோட்டா : புவி கண்காணிப்பு செயற்கோளான EOS085 ஏந்தியபடி, விண்ணில் பாய்ந்தது இஸ்ரோ அனுப்பிய எஸ்எஸ்எல்வி டி3 ராக்கெட். இதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

புவி கண்காணிப்பு, பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது போன்ற பயன்பாடுகளுக்காக 75.5 கிலோ எடை கொண்ட EOS-08 மற்றும் SR டெமோசாட் செயற்கைகோள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை இஸ்ரோவின் SSLV-D3  ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தியது. 





ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று (ஆகஸ்ட் 16) காலை 09.17 மணிக்கு SSLV-D3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதை இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமின்றி, லட்சக்கணக்கானவர்கள் பார்த்தனர். 

பூமியிலிருந்து 470 கிலோமீட்டர் தொலைவில் புவி தாழ் வட்டப் பாதையில் தற்போது இஓஎஸ் 08 செயற்கைக் கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இ.ஓ.எஸ்-8 செயற்கைக்கோளின் பயணம் வெற்றி அடைய வேண்டி ஆந்திராவில் உள்ள செங்காளம்மன் கோயிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேற்று சுவாமி  தரிசனம் செய்து வேண்டிக் கொண்டார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்