விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் SSLV-D3 ராக்கெட்.. புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது EOS08!

Aug 16, 2024,07:30 PM IST

ஸ்ரீஹரிகோட்டா : புவி கண்காணிப்பு செயற்கோளான EOS085 ஏந்தியபடி, விண்ணில் பாய்ந்தது இஸ்ரோ அனுப்பிய எஸ்எஸ்எல்வி டி3 ராக்கெட். இதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

புவி கண்காணிப்பு, பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது போன்ற பயன்பாடுகளுக்காக 75.5 கிலோ எடை கொண்ட EOS-08 மற்றும் SR டெமோசாட் செயற்கைகோள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை இஸ்ரோவின் SSLV-D3  ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தியது. 





ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று (ஆகஸ்ட் 16) காலை 09.17 மணிக்கு SSLV-D3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதை இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமின்றி, லட்சக்கணக்கானவர்கள் பார்த்தனர். 

பூமியிலிருந்து 470 கிலோமீட்டர் தொலைவில் புவி தாழ் வட்டப் பாதையில் தற்போது இஓஎஸ் 08 செயற்கைக் கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இ.ஓ.எஸ்-8 செயற்கைக்கோளின் பயணம் வெற்றி அடைய வேண்டி ஆந்திராவில் உள்ள செங்காளம்மன் கோயிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேற்று சுவாமி  தரிசனம் செய்து வேண்டிக் கொண்டார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் தாக்குதல்: பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல்காந்தி முடிவு!

news

காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி!

news

சிறிய கடைகளின் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்:டாக்டர் அன்புமணி

news

மனமாற்றம் வேண்டும்!!

news

போவோமா ஊர்கோலம்... பயணப்படுவோம் தோழி!

news

தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை நாளை வெளியிடுகிறார் விஜய்

news

இந்த வாய்ப்பு உங்களுக்கு தான் மக்களே... இன்றும் தங்கம் விலை குறைவு தான்!

news

தமிழ்நாட்டுக்கு வழங்கப்படாத கல்வி நிதி.. மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ். திடீர் கண்டனம்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 29, 2025... இன்று பிறரிடம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்