விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் SSLV-D3 ராக்கெட்.. புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது EOS08!

Aug 16, 2024,07:30 PM IST

ஸ்ரீஹரிகோட்டா : புவி கண்காணிப்பு செயற்கோளான EOS085 ஏந்தியபடி, விண்ணில் பாய்ந்தது இஸ்ரோ அனுப்பிய எஸ்எஸ்எல்வி டி3 ராக்கெட். இதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

புவி கண்காணிப்பு, பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது போன்ற பயன்பாடுகளுக்காக 75.5 கிலோ எடை கொண்ட EOS-08 மற்றும் SR டெமோசாட் செயற்கைகோள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை இஸ்ரோவின் SSLV-D3  ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தியது. 





ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று (ஆகஸ்ட் 16) காலை 09.17 மணிக்கு SSLV-D3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதை இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமின்றி, லட்சக்கணக்கானவர்கள் பார்த்தனர். 

பூமியிலிருந்து 470 கிலோமீட்டர் தொலைவில் புவி தாழ் வட்டப் பாதையில் தற்போது இஓஎஸ் 08 செயற்கைக் கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இ.ஓ.எஸ்-8 செயற்கைக்கோளின் பயணம் வெற்றி அடைய வேண்டி ஆந்திராவில் உள்ள செங்காளம்மன் கோயிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேற்று சுவாமி  தரிசனம் செய்து வேண்டிக் கொண்டார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தொடர் உயர்விற்கு பின்னர் குறைந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா?

news

நேரம் கடந்தாச்சு.. இன்னும் பிரச்சாரத்தை துவக்கவில்லை.. என்ன செய்ய போகிறார் விஜய்?

news

விஜய் வருகையால்.. திணறிப் போனது திருச்சி.. விமான நிலையத்தை அதிர வைத்த தொண்டர்கள்

news

விஜய்யை மட்டும் தொடர்ந்து குறி வைத்து விமர்சிக்கும் சீமான்... லேட்டஸ்ட் விளாசல் இதோ!

news

கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போகிறேன்: முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

news

திமுக அரசின் மோசடிக்கு அளவே இல்லையா? அன்புமணி ராமதாஸ் காட்டம்!

news

நாடு முழுவதும் பட்டாசைத் தடை பண்ணுங்க.. அது ஏன் டெல்லிக்கு மட்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து

news

விஜய் நா வரேன், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு: தவெகவின் பிரசார லோகோ வெளியீடு!

news

வன்னியர் சங்கத்துக்கு பூட்டு.. ராமதாஸ் அன்புமணி - ஆதரவாளர்கள் இடையே மோதல்

அதிகம் பார்க்கும் செய்திகள்