தமிழ்நாட்டில்.. புது ரேஷன் கார்டு கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.. நீங்க வாங்கிட்டீங்களா?

Jun 11, 2024,03:29 PM IST

சென்னை:  புதிதாக 2 லட்சம் பேருக்கு ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை தகவல் தெரிவித்துள்ளது. விண்ணப்பித்துள்ளவர்களில் தகுதியானவர்களுக்கு தற்போது புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது.


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் இதுவரை நடைமுறையில் இருந்து வந்ததினால், புதிதாக ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிதாக சுமார் 2 லட்சம் பேர் ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்து காத்துள்ளனர். காத்திருக்கும் இந்த 2 லட்சம் பேருக்கும் ரேஷன் அட்டை வழங்கும் பணி தற்போது தொடங்கியுள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை தகவல் தெரிவத்துள்ளது.




நேற்று முதல் இந்த பணிகள் தொடங்கியுள்ளன. ரேஷன் கார்டு இல்லாமல் பல முக்கிய நலத் திட்டங்களை அனுபவிக்க முடியாத நிலையில் மக்கள் இருந்து வந்தனர். தற்போது ரேஷன் கார்டுகள் கொடுக்கப்பட்டு வருவதால் அவர்களும் மக்கள் நலத் திட்டங்களின் பலன்களைப் பெற முடியும்.


ரேஷன்  அட்டை வேண்டி விண்ணப்பித்த ரேஷன் அட்டை தாரர்களின் விண்ணப்பங்கள்  மாவட்டம் வாரியாக பிரிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்டத்திற்குரிய அதிகாரிகள் விண்ணப்பங்களை பரிசீலினை செய்து தகுதி உள்ளவர்களுக்கு ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் புதிதாக ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. ஏற்கனவே சரி பார்த்து வைக்கப்பட்ட ரேஷன் அட்டைகள் வழங்கும் பணியும் தற்போது தொடங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

news

அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக.,விற்கு எத்தனை சீட்? .. சூப்பர் சுவாரஸ்ய எதிர்பார்ப்பு!

news

விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்... 27ம் தேதி சேலம் இல்லைங்க.. கரூரில் மக்களை சந்திக்கிறார்

news

சென்னையில் ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை மைய அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

news

திமுக அரசின் சமூகநீதி விடுதிகளில் மதமாற்றமா? நயினார் நாகேந்திரன் கண்டனம்!

news

விஜயம் - ஜெயம் பேச்சு.. நான் சொன்னது ஆக்சுவல்லி மொக்கையானது.. பார்த்திபன் விளக்கம்

news

ஜிஎஸ்டி வரி குறைப்பு... ஆவின் பால் பொருட்களின் விலை குறைப்பு

news

ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட பிறகு ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்படாதது ஏன்?: அன்புமணி ராமதாஸ்!

news

ஜிஎஸ்டி சீரமைப்பு அமலான முதல் நாளில்.. இந்தியப் பங்குச் சந்தையில் வீழ்ச்சி

அதிகம் பார்க்கும் செய்திகள்