கொடைக்கானல்: கொடைக்கானல் பகுதியில் நேற்றும் இன்றும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மழை இன்றி காணப்பட்டது. இந்நிலையில், நேற்றும் இன்று மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த சாரல் மழையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். குறிப்பாக நேற்று பக்ரீத் பண்டிகை விடுமுறை என்பதால், அதிகளவில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வந்தனர். தொடர்ந்து மாலையில் மேகமூட்டமும், விட்டுவிட்டு சாரல் மழையும் பெய்தது. ஏரிச்சாலையில் சுற்றுலா பயணிகள் குடையை பிடித்துக் கொண்டு சைக்களிங், குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில், இன்று கொடைக்கானல் பகுதியில் மதியத்தில் இருந்து மழை பெய்து வருகிறது. மன்னவனூர், பேரிஜம், கூக்கால், செண்பகனூர், நாயுடுபுரம்,வட்டசோலை, பிரகாசபுரம், வட்டக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இன்று பள்ளிகள் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. இருப்பினும் கூட்டம் அதிகம் இல்லாத காரணத்தினால் போக்குவரத்து நெரிசல் இன்றி மக்கள் ப்ரீயாக பயணம் செய்வதாக தெரிவித்திருந்தனர்.
தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக கொடைக்கானல் முழுவதும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அவை சிறிது சிறிதாக வடியவும் ஆரம்பித்துள்ளது. மேக கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் ரம்மியமான சூழலில் கொடைக்கானல் காணப்படுகிறது.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்
அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!
பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்
ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்
{{comments.comment}}