கொடைக்கானல்: கொடைக்கானல் பகுதியில் நேற்றும் இன்றும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மழை இன்றி காணப்பட்டது. இந்நிலையில், நேற்றும் இன்று மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த சாரல் மழையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். குறிப்பாக நேற்று பக்ரீத் பண்டிகை விடுமுறை என்பதால், அதிகளவில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வந்தனர். தொடர்ந்து மாலையில் மேகமூட்டமும், விட்டுவிட்டு சாரல் மழையும் பெய்தது. ஏரிச்சாலையில் சுற்றுலா பயணிகள் குடையை பிடித்துக் கொண்டு சைக்களிங், குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில், இன்று கொடைக்கானல் பகுதியில் மதியத்தில் இருந்து மழை பெய்து வருகிறது. மன்னவனூர், பேரிஜம், கூக்கால், செண்பகனூர், நாயுடுபுரம்,வட்டசோலை, பிரகாசபுரம், வட்டக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இன்று பள்ளிகள் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. இருப்பினும் கூட்டம் அதிகம் இல்லாத காரணத்தினால் போக்குவரத்து நெரிசல் இன்றி மக்கள் ப்ரீயாக பயணம் செய்வதாக தெரிவித்திருந்தனர்.
தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக கொடைக்கானல் முழுவதும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அவை சிறிது சிறிதாக வடியவும் ஆரம்பித்துள்ளது. மேக கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் ரம்மியமான சூழலில் கொடைக்கானல் காணப்படுகிறது.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}