நாங்கள் ஜெயித்துக் கொண்டே இருப்போம்.. டிரம்ப், பிரதமர் மோடிக்கு ஆதரவாக.. ஜார்ஜியா மெலோனி பேச்சு

Feb 23, 2025,02:07 PM IST

வாஷிங்டன்: வலது சாரிகள் எப்போதெல்லாம் வளர்கிறார்களோ அப்போதெல்லாம் இடதுசாரி சக்திகள் அவர்களுக்கு எதிராக அவதூறுகளை, சேற்றை வீசிக் கொண்டே இருக்கிறார்கள். நீங்கள் சேற்றை வீச வீச நாங்கள் வளர்ந்து கொண்டே இருப்போம். மக்கள் எங்களுக்கு வாக்களித்துக் கொண்டே இருப்பார்கள் என்று கூறியுள்ளார் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி.


கன்சர்வேட்டிவ் அரசியல் நடவடிக்கைக் குழுவின் கூட்டம் வாஷிங்டனில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு காணொளி காட்சி மூலமாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி உரையாற்றினார். அப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு ஆதரவாக அவர் பேசினார்.




ஜார்ஜியா மெலோனியின் உரையிலிருந்து:


வலது சாரி தலைவர்கள் எப்போதெல்லாம் உயர்ந்து வருகிறார்களோ அப்போதெல்லாம் இடதுசாரி தலைவர்கள் பதட்டமாகி விடுகிறார்கள். குறிப்பாக அமெரிக்க அதிபர் பதவியில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமர்ந்ததும் அவர்களது பதட்டம் மேலும் அதிகமாகியுள்ளது. 


பில் கிளிண்டன், டோனி பிளேர் ஆகியோர் பதவியில் இருந்தபோது உலக அளவில் இடதுசாரிகளின் கட்டமைப்பை உருவாக்கினர். அவர்களை ஸ்டேட்ஸ்மென் என்று புகழ்ந்து கொண்டனர். ஆனால் இன்று டிரம்ப், மெலோனி, ஜாவியர் மிலி, நரேந்திர மோடி ஆகியோர் பேசினால், அவர்களை ஜனநாயகத்திற்கு ஆபத்தானவர்கள் என்று விமர்சிக்கிறார்கள். இதுதான் இடதுசாரிகளின் இரட்டை முகம். ஆனால் நாம் இதை நீண்ட காலமாகவே சந்தித்துதான் வந்திருக்கிறோம்.


ஆனால் இதில் என்ன நல்ல விஷயம் என்றால், மக்கள் இவர்களை ஏற்பதில்லை. புறம் தள்ளி விடுகிறார்கள். இவர்கள் என்னதான் நம் மீது சேற்றை வாரி இறைத்தாலும், மக்கள் நமக்கு வாக்களித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.




டிரம்ப்பின் வெற்றி, இடதுசாரிகளை பதட்டத்துக்குள்ளாக்கியுள்ளது. அவர்களது எரிச்சல், பைத்தியக்காரத்தனமான முழக்கமாக மாறியுள்ளது. வலதுசாரிகள் வெல்வது மட்டுமல்லாமல், உலக அளவில் அவர்கள் ஒருங்கிணைந்துள்ளனர் என்பதுதான் அவர்களது பதட்டத்துக்குக் காரணம் என்றார் அவர்.


மெலோனி இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவதற்கு இத்தாலியில் கடும் எதிர்ப்பு நிலவியது. குறிப்பாக எதிர்க்கட்சிகள்  மிகக் கடுமையாக இதை விமர்சித்திருந்தனர். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் மெலோனி இக்கூட்டத்தில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தக் கூட்டத்தில் மெலோனி பேசும்போது தனது அரசு இத்தாலியில் மேற்கொண்டுள்ள பல்வேறு மாற்றங்கள், முன்னேற்றங்கள் குறித்தும் விரிவாக பட்டியலிட்டார். தனது ஆட்சிக்காலத்தில்தான் இத்தாலியில் பொருளாதாரம் ஸ்திரமடைந்ததாகவும், சட்டரீதியான குடியமர்வுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் காலியாகும் ராஜ்யசபா இடங்கள்...நிரப்புவதில் இப்படி ஒரு சிக்கலா?

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026...தொகுதிகளை குறைத்த பாஜக...காரணம் இது தானா?

news

ஜனநாயகன் வழக்கு வாபஸ்...படம் எப்போது ரிலீசாகும்? சென்சார் சட்டம் சொல்வது இதுதான்

news

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்!

news

சென்னையில் காலை நேரப் பனிமூட்டம் நீடிக்கும்...சென்னை வானிலை மையம் தகவல்

news

திமுக.,வின் அடுத்த தலைவர் உதயநிதியா?...முதல்வர் பேசியதற்கு என்ன அர்த்தம்?

news

செங்கோட்டையன் செல்லாத நோட்டு... விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார்: செல்லூர் ராஜூ பேட்டி

news

வெற்று வாக்குறுதியளித்து ஊராட்சி செயலாளர்களை வஞ்சிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

விஜய் பேசினால் எதிர்க்கட்சிகளின் கதை முடிந்துவிடும்...செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்