30 வருடமாக உயராத சம்பளம்.. ஜப்பான் தொழிலாளர்களின் பரிதாப நிலை!

Feb 04, 2023,01:57 PM IST

டோக்கியோ: கடந்த 30 வருடமாக ஜப்பானில் தொழிலாளர்களின் சம்பளம் அதே விகிதத்தில்தான் இருக்கிறதாம். இதனால் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


ஜப்பானில் கிட்டத்தட்ட கடந்த ஒரு தலைமுறை ஊழியர்கள், ஊதிய உயர்வே காணாமல் வேலை பார்த்து வருகிறார்களாம். இதனால் அவர்களது வாழ்க்கைத் தரம் உயராமல் அப்படியே இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. விலைவாசி பலமடங்கு உயர்ந்தும் கூட இவர்களுக்கான சம்பளம் பெரிதாக உயரவில்லையாம்.


உலகின் 3வது பொருளாதார வல்லரசாக ஜப்பான் திகழ்வது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அங்கு தொழிலாளர்களுக்கான சம்பள விகிதம் கடந்த 30 வருடமாக உயரவே இல்லையாம். இதனால் ஊழியர்கள் குடும்பம் நடத்த பணம் போதாமல், வேறு வேறு வேலைகளையும் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்களாம்.


இது தற்போது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இதையடுத்து நிறுவனங்கள்  ஊழியர்களின் ஊதிய விகிதத்தை உயர்த்த வேண்டும் என்று பிரதமர் புமியோ கிஷிடா கோரிக்கை விடுத்துள்ளார். காலத்திற்கேற்ப ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


பிற நாடுகளைப் போலவே ஜப்பானிலும் பணவீக்கம் ஒரு பிரச்சினையாகவே உள்ளது. நுகர்வோர் பொருட்கள் 4 சதவீத உயர்வைக் கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்