30 வருடமாக உயராத சம்பளம்.. ஜப்பான் தொழிலாளர்களின் பரிதாப நிலை!

Feb 04, 2023,01:57 PM IST

டோக்கியோ: கடந்த 30 வருடமாக ஜப்பானில் தொழிலாளர்களின் சம்பளம் அதே விகிதத்தில்தான் இருக்கிறதாம். இதனால் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


ஜப்பானில் கிட்டத்தட்ட கடந்த ஒரு தலைமுறை ஊழியர்கள், ஊதிய உயர்வே காணாமல் வேலை பார்த்து வருகிறார்களாம். இதனால் அவர்களது வாழ்க்கைத் தரம் உயராமல் அப்படியே இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. விலைவாசி பலமடங்கு உயர்ந்தும் கூட இவர்களுக்கான சம்பளம் பெரிதாக உயரவில்லையாம்.


உலகின் 3வது பொருளாதார வல்லரசாக ஜப்பான் திகழ்வது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அங்கு தொழிலாளர்களுக்கான சம்பள விகிதம் கடந்த 30 வருடமாக உயரவே இல்லையாம். இதனால் ஊழியர்கள் குடும்பம் நடத்த பணம் போதாமல், வேறு வேறு வேலைகளையும் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்களாம்.


இது தற்போது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இதையடுத்து நிறுவனங்கள்  ஊழியர்களின் ஊதிய விகிதத்தை உயர்த்த வேண்டும் என்று பிரதமர் புமியோ கிஷிடா கோரிக்கை விடுத்துள்ளார். காலத்திற்கேற்ப ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


பிற நாடுகளைப் போலவே ஜப்பானிலும் பணவீக்கம் ஒரு பிரச்சினையாகவே உள்ளது. நுகர்வோர் பொருட்கள் 4 சதவீத உயர்வைக் கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்