30 வருடமாக உயராத சம்பளம்.. ஜப்பான் தொழிலாளர்களின் பரிதாப நிலை!

Feb 04, 2023,01:57 PM IST

டோக்கியோ: கடந்த 30 வருடமாக ஜப்பானில் தொழிலாளர்களின் சம்பளம் அதே விகிதத்தில்தான் இருக்கிறதாம். இதனால் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


ஜப்பானில் கிட்டத்தட்ட கடந்த ஒரு தலைமுறை ஊழியர்கள், ஊதிய உயர்வே காணாமல் வேலை பார்த்து வருகிறார்களாம். இதனால் அவர்களது வாழ்க்கைத் தரம் உயராமல் அப்படியே இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. விலைவாசி பலமடங்கு உயர்ந்தும் கூட இவர்களுக்கான சம்பளம் பெரிதாக உயரவில்லையாம்.


உலகின் 3வது பொருளாதார வல்லரசாக ஜப்பான் திகழ்வது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அங்கு தொழிலாளர்களுக்கான சம்பள விகிதம் கடந்த 30 வருடமாக உயரவே இல்லையாம். இதனால் ஊழியர்கள் குடும்பம் நடத்த பணம் போதாமல், வேறு வேறு வேலைகளையும் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்களாம்.


இது தற்போது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இதையடுத்து நிறுவனங்கள்  ஊழியர்களின் ஊதிய விகிதத்தை உயர்த்த வேண்டும் என்று பிரதமர் புமியோ கிஷிடா கோரிக்கை விடுத்துள்ளார். காலத்திற்கேற்ப ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


பிற நாடுகளைப் போலவே ஜப்பானிலும் பணவீக்கம் ஒரு பிரச்சினையாகவே உள்ளது. நுகர்வோர் பொருட்கள் 4 சதவீத உயர்வைக் கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


சமீபத்திய செய்திகள்

news

கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 15, 2025... இன்று பண மழையில் நனைய போகும் ராசிக்காரர்கள்

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. இப்படித்தான் செய்யப் போகிறோம்.. அமுதா ஐஏஎஸ் விளக்கம்!

news

தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

news

எம்ஜிஆர் சிவாஜி மட்டும் இல்லை.. விஜய் சூர்யாவுடனும் கலக்கிய சரோஜாதேவி!

news

எம்ஜிஆர் - சிவாஜி கணேசன்- ஜெமினி கணேசன்.. 3 ஸ்டார்களுடன் போட்டி போட்டு நடித்தவர் சரோஜா தேவி!

news

Sarojadevi is no more: "கன்னடத்து பைங்கிளி" நடிகை சரோஜா தேவி காலமானார்!

news

தமிழக வெற்றிக் கழகம்.. நடிகர் விஜய்யின் அரசியல் பாதை சரியாக போகிறதா?

news

"Crush" என்னும் ஆங்கில வார்த்தையின் அர்த்தம் புரியாத பருவத்தில் நாங்கள் ரசித்த சரோஜாதேவி!

அதிகம் பார்க்கும் செய்திகள்