டோக்கியோ: ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குவதால் உடல் திறனில் முன்னேற்றம் ஏற்படுவதாக ஜப்பானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். இது பல்வேறு தரப்பு மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 நாளைக்கு முன்னாடிதான் வீக்என்ட் நாட்களில் நல்லா தூங்குனா உடம்புக்கும், மனசுக்கும் நல்லதுன்னு ஒரு செய்தி படிச்சோம். இப்ப என்னடான்னா, ஒரு நாளைக்கு 35 நிமிஷம் தூங்குனா சூப்பரா இருக்கும்னு ஜப்பானிலிருந்து ஒரு செய்தி வந்து சேர்ந்துள்ளது.

நன்றாக தூங்கினால் ஹார்ட்டுக்கு நல்லது. அதனால தூங்குறவங்களை எழுப்பாதீங்க. நல்லா தூங்க விடுங்க. இப்படி வாரத்தில் ஒரு நாள் ஆவது ரெஸ்ட் எடுக்குறதுனால இதயம் பலப்படும் என அமெரிக்க ஆய்வறிக்கையில் கூறியதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.
இதனால் பலரும், இனிமேல் ஞாயிற்றுக்கிழமை நல்லா தூங்குவேன். நான் எவ்வளவு நேரம் ஆனாலும் எழுந்திருக்க மாட்டேன். இனி தயவு செய்து எழுப்பாதீங்க. அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. அதே போல் மீம்ஸ் கிரியேட்டஸ்க்களும் இந்த செய்தியை வைத்து கலாய்த்து தள்ளி வருகிறார்கள்.
தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே:
தூக்கம்.. தூக்கம் என்பது மக்களுக்கு இன்றியமையாத ஒன்று. தற்போது நிலவும் காலகட்டத்தில் தூக்கமின்மையால் மன அழுத்தம்,இதய கோளாறு, இதயம் பலமின்மை என பல்வேறு நோய்களால் அவதியுற்று வருகின்றனர். குறிப்பாக ஆண்கள் போலவே பெண்களும் அதிக வேலை சுமையால் சரியான தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர். இதன் காரணமாக கூடவே பல நோய்களும் தொற்றிக் கொள்கிறது.
சமீபத்தில் வாரத்தில் ஒரு நாளாவது 16 மணி நேரம் ஆழ்ந்து தூங்கினால் வாரத்தில் மற்ற நாட்களில் தூக்கம் இல்லாததை சமன் செய்து விடும் என அமெரிக்கா ஆய்வறிக்கையில் தகவல் வெளியானது. இது தவிர அதிக நேரம் தூங்கினால் உடல் எடை கூடி விடுமோ என்ற பயத்தினாலும் மக்கள் தூக்கத்தை குறைத்து வந்தனர். இந்த நிலையில் நன்றாக தூங்கலாம் என மக்கள் நிம்மதி அடைந்து வந்தனர்.
ஜப்பான் இளைஞரின் நூதன தூக்கம்:
இதற்கிடையே ஜப்பானில் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அதாவது ஜப்பானை சேர்ந்த டைசுகி ஹோரி என்பவர் ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குவாராம். அதிலும் 12 வருடமாக ஒரு நாளுக்கு வெறும் முப்பதே நிமிடங்கள் மட்டும்தான் தூங்குவாராம். இப்படி குறைவான நேரம் உறங்கினாலும் நிம்மதியாக உறங்குவதால் வேலைத் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக மூளைக்கு பல வருடங்களாக பயிற்சி அளித்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை தற்போது பல்வேறு தரப்பு மக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால் அதிக நேரம் தூங்கினால் நல்லதா.. குறைவான தூக்கம் நல்லதா.. என பலரும் யோசிக்க தொடங்கி விட்டனர்.
இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாதீங்க. உங்களுக்கு எவ்வளவு நேரம் தூங்க முடியுதோ அதை நிம்மதியா தூங்குங்க. அதுவே உங்கள் உடம்புக்கு நல்லது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி கிடையாது: புதுச்சேரி சபாநாயகர் செல்வம்
உக்ரைன் - ரஷ்யா போர்.. இதுக்கு என்ட் கார்டே கிடையாதாய்யா.. லேட்டாகுமாம்.. அமெரிக்கா அறிவிப்பு!
டிட்வா புயல் பாதிப்பு...ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம்: அமைச்சர் k.k.s.s.r.ராமச்சந்திரன் அறிவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாளை லீவு?.. என்ன காரணம் தெரியுமா.. வாங்க இதைப் படியுங்க!
மதகு சரி செய்யாததால் குழந்தை உயிரிழப்பு... திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது தெரியுமா?
திருநெல்வேலி மாவட்டத்தில்.. 2.33 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு!
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா.. பரணி தீபத்தின் விசேஷம் என்ன தெரியுமா?
{{comments.comment}}