ஆல்வார்: முன்னாள் மத்திய அமைச்சரான ஜஸ்வந்த் சிங்கின் மகனும், மருமகளும் சென்ற கார் சாலை விபத்தில் சிக்கியது. இதில் மருமகள் பலியானார், மகன் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் ஜஸ்வந்த் சிங். நிதியமைச்சர், பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். பாஜகவில் மூத்த தலைவராக இருந்தவர். மறைந்த வாஜ்பாய்க்கு மிகவும் நெருக்கமானவர். இவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில்தான் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காந்தஹாருக்கு தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் நடந்தது. கார்கில் போரையும் பார்த்தவர் ஜஸ்வந்த் சிங்.

இவரது மகன் மன்வேந்திர சிங், அவரது மனைவி பெயர் சித்ரா சிங். மன்வேந்திர சிங் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். தனது மனைவியுடன் மன்வேந்திர சிங் டெல்லியிலிருந்து ஜெய்ப்பூர் நோக்கி காரில் போய்க் கொண்டிருந்தார். அப்போது டெல்லி - மும்பை தேசிய நெடுஞ்சாலையில், ஆல்வார் அருகே சாலை விபத்தில் கார் சிக்கியது. படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சித்ரா சிங் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. மன்வேந்திர சிங் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
கார் டிரைவர் நரேந்திராவும் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக போய் சாலையோரமாக இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!
திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்
ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!
சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)
ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)
கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க
வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!
தாயன்பு !
All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!
{{comments.comment}}