ஆல்வார்: முன்னாள் மத்திய அமைச்சரான ஜஸ்வந்த் சிங்கின் மகனும், மருமகளும் சென்ற கார் சாலை விபத்தில் சிக்கியது. இதில் மருமகள் பலியானார், மகன் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் ஜஸ்வந்த் சிங். நிதியமைச்சர், பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். பாஜகவில் மூத்த தலைவராக இருந்தவர். மறைந்த வாஜ்பாய்க்கு மிகவும் நெருக்கமானவர். இவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில்தான் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காந்தஹாருக்கு தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் நடந்தது. கார்கில் போரையும் பார்த்தவர் ஜஸ்வந்த் சிங்.

இவரது மகன் மன்வேந்திர சிங், அவரது மனைவி பெயர் சித்ரா சிங். மன்வேந்திர சிங் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். தனது மனைவியுடன் மன்வேந்திர சிங் டெல்லியிலிருந்து ஜெய்ப்பூர் நோக்கி காரில் போய்க் கொண்டிருந்தார். அப்போது டெல்லி - மும்பை தேசிய நெடுஞ்சாலையில், ஆல்வார் அருகே சாலை விபத்தில் கார் சிக்கியது. படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சித்ரா சிங் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. மன்வேந்திர சிங் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
கார் டிரைவர் நரேந்திராவும் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக போய் சாலையோரமாக இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அதிமுக கூடாரத்தில் சலசலப்பு: தவெக-வில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்? செங்கோட்டையன் சூசகம்!
2025ல் இந்தியர்கள் கூகுளில் எதை அதிகமாக தேடியிருக்கிறார்கள் பாருங்களேன்!
2025ம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய தங்கத்தின் 'மின்னல்' பயணம்
2026-ல் இந்தியச் சந்தையில் வெளியாகப் போகும் மிகச்சிறந்த 3 கார்
இந்திய மொபைல் சந்தையில் செம சண்டை.. 2025ல்.. யாரெல்லாம் கலக்கியிருக்காங்க பாருங்க!
2025ல்.. மாருதி காரை பின்னுக்குத் தள்ளி மிரட்டிய.. டாடா நெக்ஸான்!
அதிரும் வங்கதேச அரசியல்.. போராட்டம் எதிரொலி.. உள்துறை சிறப்பு உதவியாளர் ராஜினாமா!
பேரன்பு பேராற்றல்.. இரண்டின் கூட்டு வடிவம்.. வாஜ்பாய்.. வைரமுத்து புகழாரம்
தலைநகரில் கிறிஸ்து பிறப்பு விழா: டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!
{{comments.comment}}