ஜெயம் ரவி - ஆர்த்தி.. மீண்டும் மனம் விட்டு பேச்சு.. ஜனவரி 18ம் தேதிக்கு அடுத்த கட்ட விசாரணை!

Dec 21, 2024,05:59 PM IST

சென்னை: ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தம்பதிக்கிடையே இன்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சமரச பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இந்த வழக்கை வரும் ஜனவரி 18ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை குடும்ப நல நீதிமன்றம்.


ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் கடந்த 2009ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய 15 ஆண்டுகால திருமண உறவில் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். 


சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தனது எக்ஸ் தளத்தில் மனைவியை விட்டு பிரிய இருப்பதாக பதிவிட்டு இருந்தார். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் மனைவி ஆர்த்தி இது ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு. என்னிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என கூறினார். இதனால் சோசியல் மீடியாக்களில் யார் மீது சரி என்று தெரியவில்லை என காரசாரமாக விவாதிக்க தொடங்கினர்.




இந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் எனவும், எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது  குடும்ப நல நீதிமன்றம் சமரச ஆய்வு மையத்தில்  பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது. 


குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரத்தின் படி ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி  சமரச தீர்வு மையத்தில்  இன்று நேரில் ஆஜராகினர். இதனைத் தொடர்ந்து ஒரு மணி நேரமாக ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதி இடையே சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேன்மொழி முன்பு மத்தியஸ்தர் ஆஜராகி இன்னும் பேச்சுவார்த்தை முடியவில்லை என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Political Update: அதிமுக டூ தவெக.. விஜய்யை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்!

news

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் கே.ஏ.செங்கோட்டையன்.. நாளை தவெகவில் சேருகிறாரா?

news

புதுச்சேரியில் ரோடுஷோ நடத்தும் தவெக.. விஜய்யின் மாஸான மாஸ்டர் பிளான் இது தானா?

news

தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 1ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

Greyshark.. பார்க்க அப்படியே பென்குவின் மாதிரியே இருக்கும்.. ஆனால் மேட்டரே வேறப்பா!

news

தமிழகம் பற்றிய கவர்னரின் கருத்து...மிக கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

news

TET தேர்வு எழுத விலக்கு அளிக்க கோரி... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

கோடியில் கொள்ளை அடிக்க தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதா?: அன்புமணி ராமதாஸ்

news

மாவீரன் பொல்லான் சிலை.. திறந்து வைத்து புகழாரம் சூட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்