ஜெயம் ரவி - ஆர்த்தி.. மீண்டும் மனம் விட்டு பேச்சு.. ஜனவரி 18ம் தேதிக்கு அடுத்த கட்ட விசாரணை!

Dec 21, 2024,05:59 PM IST

சென்னை: ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தம்பதிக்கிடையே இன்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சமரச பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இந்த வழக்கை வரும் ஜனவரி 18ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை குடும்ப நல நீதிமன்றம்.


ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் கடந்த 2009ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய 15 ஆண்டுகால திருமண உறவில் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். 


சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தனது எக்ஸ் தளத்தில் மனைவியை விட்டு பிரிய இருப்பதாக பதிவிட்டு இருந்தார். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் மனைவி ஆர்த்தி இது ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு. என்னிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என கூறினார். இதனால் சோசியல் மீடியாக்களில் யார் மீது சரி என்று தெரியவில்லை என காரசாரமாக விவாதிக்க தொடங்கினர்.




இந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் எனவும், எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது  குடும்ப நல நீதிமன்றம் சமரச ஆய்வு மையத்தில்  பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது. 


குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரத்தின் படி ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி  சமரச தீர்வு மையத்தில்  இன்று நேரில் ஆஜராகினர். இதனைத் தொடர்ந்து ஒரு மணி நேரமாக ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதி இடையே சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேன்மொழி முன்பு மத்தியஸ்தர் ஆஜராகி இன்னும் பேச்சுவார்த்தை முடியவில்லை என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

news

என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?

அதிகம் பார்க்கும் செய்திகள்