சென்னை: ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தம்பதிக்கிடையே இன்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சமரச பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இந்த வழக்கை வரும் ஜனவரி 18ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை குடும்ப நல நீதிமன்றம்.
ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் கடந்த 2009ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய 15 ஆண்டுகால திருமண உறவில் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தனது எக்ஸ் தளத்தில் மனைவியை விட்டு பிரிய இருப்பதாக பதிவிட்டு இருந்தார். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் மனைவி ஆர்த்தி இது ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு. என்னிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என கூறினார். இதனால் சோசியல் மீடியாக்களில் யார் மீது சரி என்று தெரியவில்லை என காரசாரமாக விவாதிக்க தொடங்கினர்.

இந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் எனவும், எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது குடும்ப நல நீதிமன்றம் சமரச ஆய்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது.
குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரத்தின் படி ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் இன்று நேரில் ஆஜராகினர். இதனைத் தொடர்ந்து ஒரு மணி நேரமாக ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதி இடையே சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேன்மொழி முன்பு மத்தியஸ்தர் ஆஜராகி இன்னும் பேச்சுவார்த்தை முடியவில்லை என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை
தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை
இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்
Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!
கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?
சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!
Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!
இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is
{{comments.comment}}