பெங்களூரு: ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவே கெளடாவின் பேரனும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் ஹசன் தொகுதி எம்.பியுமான பிரஜ்வால் ரேவண்ணா கட்சியை விட்டு இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
உதவி கேட்டு வந்த பெண்கள், இடமாறுதல் கோரி, பணி நியமனம் கோரி அணுகிய பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பெண்களிடம் தவறாக நடந்து கொண்டு அவற்றை வீடியோவில் பதிவு செய்து வைத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரஜ்வால் ரேவண்ணா. கர்நாடக அரசியலை இந்த சம்பவம் உலுக்கி எடுத்து வருகிறது.

கர்நாடகாவில் நடந்த முதல் கட்ட தேர்தலுக்கு முன்பாக இந்த வீடியோ விவகாரம் வெளியானதால் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். யார் இந்த வீடியோக்களை வெளியிட்டார்கள் என்ற பரபரப்பும் அதிர்ச்சியும் அவர்களை சுழற்றியடித்து வருகிறது. இந்த விவகாரம் பாஜக - ஜேடிஎஸ் கூட்டணிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் இன்று பிரஜ்வால் ரேவண்ணா கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறும் கூறி நோட்டீஸும் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கட்சி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் தற்போது பிரஜ்வால் இந்தியாவிலேயே இல்லை. அவர் ஜெர்மனிக்கு போய் விட்டார். திரும்ப வருவாரா என்று தெரியவில்லை. ஹசன் தொகுதியில் அவர் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வரும், பிரஜ்வாலின் சித்தப்பாவுமான எச். டி. குமாரசாமி கூறுகையில், பிரஜ்வால் ரேவண்ணாவாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, தவறு செய்திருந்தால் அவர்களை நான் காப்பாற்ற மாட்டேன். இது தனிப்பட்ட பிரச்சினை. இதை காங்கிரஸ் அரசியலாக்கியிருக்கிறது. மொத்த குடும்பத்தின் பெயரையும் கெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் என்றார் அவர்..
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}