மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி.. குடும்ப நல கோர்ட்டில் மனு செய்தார்.. நடிகர் ஜெயம் ரவி

Sep 10, 2024,06:10 PM IST

சென்னை:   நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.


தமிழ் சினிமாவில் ஜெயம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜெயம் ரவி. முதல் ஏன் இவருக்கு மிகப்பெரிய இடத்தை உருவாக்கித் தந்தது. இதனை தொடர்ந்து இவரின் அண்ணனான மோகன் ராஜாவின் இயக்கத்தில் பல வெற்றி படங்களை நடித்து பிரபலமானார். ஜெயம் ரவி, தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் மூலம் அனைத்து தரப்பு மக்களிடையே பாராட்டைப் பெற்றார்.




இதற்கிடையே  ஜெயம் ரவி, தயாரிப்பாளர் சுஜாதாவின் மகளான  ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஆரவ் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் படத்தில் நடித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி 15 வருடங்கள் நிறைவடைந்து உள்ளன. இந்த நிலையில் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக  மனைவியிடம் இருந்து பிரிவதாகவும், எனது தனிப்பட்ட உரிமைக்கு மதிப்பு அளிக்குமாறும் நடிகர் ஜெயம் ரவி நேற்று அறிக்கை மூலம் அறிவித்திருந்தார்.


நேற்று பிரிவதாக அறிவித்த ஜெயம் ரவி, இன்று தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில்  முறைப்படி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணை வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. அதில் 2009ம் ஆண்டு  நடைபெற்ற திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் எனவும், மனைவி ஆர்த்தியிடமிருந்து தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனவும் ஜெயம் ரவி கோரிக்கை வைத்துள்ளதாக அவர் தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்