தமிழ் தெரிந்தவர்களுக்கு வடபழநி முருகன் கோவிலில் வேலைவாய்ப்பு: மாதம் ரூ.50,000 வரை சம்பளம்

Jul 11, 2025,01:19 PM IST

சென்னை: தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதும்.. சூப்பரான வேலை வாய்ப்பு காத்திருக்கிறது.


சென்னை வடபழநி முருகன் கோவிலில்தான் இந்த https://www.thentamil.com/topic/government-jobகாத்திருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தமிழ் அறிந்த இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.


பணியிட விவரங்கள்:


வடபழநி முருகன் கோவிலில் எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர், மடப்பள்ளி (சமையல் பிரிவு), திருவலகு (சுத்திகரிப்புப் பணி) உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தப் பணிகள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வருவதால், அரசு வேலைக்கு இணையான பாதுகாப்பு மற்றும் சலுகைகள் கிடைக்கும்.




தகுதி மற்றும் சம்பளம்:


கல்வித் தகுதி: தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும், 8ஆம் வகுப்பு அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சம்பளம்: தேர்வு செய்யப்படும் பணிகளின் தன்மைக்கேற்ப, மாதச் சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும்.


வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 45 வயது வரை உள்ளவர்களாக இருக்கலாம்.


விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதி:


விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, முழுமையான விவரங்களைத் தெரிந்துகொண்டு, விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: 2025 ஜூலை 19.


இந்த வேலைவாய்ப்புக்கு எந்தவிதமான தேர்வோ அல்லது விண்ணப்பக் கட்டணமோ கிடையாது. இது விண்ணப்பதாரர்களுக்கு ஒரு கூடுதல் சலுகையாகும். தமிழ் மொழி அறிவு மட்டுமே முக்கிய தகுதியாக இருப்பதால், பலருக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும். ஆர்வமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பித்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

news

பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்