டெலிபோன் பூத்.. உள்ளே போன ஒருவர் ரொம்ப நேரமாக ரிசீவரை காதில் வைத்திருந்தார்.. ஆனால் ஒரு வார்த்தை கூட பேசவேயில்லை. வெறுமனே கேட்டுக் கொண்டிருந்தார். வெளியில் காத்திருந்த இன்னொரு நபர் டென்ஷனாகி விட்டார்.
பூத் கதவை வேகமாக திறந்த அந்த நபர், "ஏன் சார்.. கிட்டத்தட்ட அரை மணி நேரமாச்சு நீங்க உள்ளே போய்.. போனை காதிலேயே வச்சிருக்கீங்களே தவிர ஒரு வார்த்தை கூட பேசாம அப்படியே நிக்கறீங்களே.. நாங்கெல்லாம் போன் செய்ய வேண்டாமா?
உள்ளே இருந்தவர் - சார், நான் என் மனைவி கிட்ட பேசிட்டிருக்கேன்!
--
ஓகே.. ரெஸ்ட் இன் பீஸ்!
ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புக்கு போக ஆரம்பித்தார் மனைவி.. கணவருக்கோ செம ஹேப்பி.. சில நாட்கள் கழிந்தது.
மனைவி - வெல்கம் ஹோம் டார்லிங்.
கணவர் - அடடே அசத்துறியே.. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு டியர்.
மனைவி - ஓகே டார்லிங்.. Rest in Peace!
--
அதைத் தூக்க முடியலை.. அதான்!
நீதிபதி - ஏம்மா, உங்க புருஷனை சேரைத் தூக்கி அடிச்சீங்களா.. ஏன் அப்படி பண்ணீங்க?
மனைவி - ஆமாங்க ஐயா.. டேபிளைத் தூக்க பார்த்தேன்.. தூக்க முடியலை.. அதான் சேரைத் தூக்கி அடிச்சேன்!
--
ஒரே மாதிரியா இருக்கே!
ஒரு பெண் தனது தோழியுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
தோழி 1 - ஹாய்.. எனக்கு நான்காவதாக கல்யாணம் நடக்கப் போகுது
தோழி 2 - வாவ், சூப்பர். வாழ்த்துகள். சரி உன்னோட முன்னாள் கணவர்கள் பத்தி தெரிஞ்சுக்க ஆசைப்படுறேன்.. முதல் கணவருக்கு என்னாச்சு?
தோழி 1 - அவர் விஷம் கலந்த காளான் பிரியாணி சாப்பிட்டு இறந்து போயிட்டார்.
தோழி 2 - ஓ கடவுளே.. 2வது கணவருக்கு என்ன நடந்தது?
தோழி 1 - அவரும் விஷம் கலந்த காளாண் பிரியாணி சாப்பிட்டுத்தான் இறந்து போனார்.
தோழி 2- மை குட்னஸ்..! 3வது கணவர் பத்தி கேக்கலாமா.. எனக்கு கேக்கவே சங்கடமா இருக்கு.. அவருக்கு என்னாச்சு.. சொல்லேன்.
தோழி 1 - அவர் கழுத்து முறிபட்டு இறந்து போனார்.
தோழி 2 - கழுத்து முறிபட்டா.. ?.. அது எப்படி??
தோழி 1 - காளான் பிரியாணி சாப்பிட முடியாது என்று மறுத்தார்.. அதான்!
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
{{comments.comment}}