டெல்லி: நீதியரசர் பூஷன் ராமகிருஷ்ண கவாய் மே 14-ம் தேதி இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக பதவி ஏற்கிறார்.
தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மே 13-ம் தேதி ஓய்வு பெறுகிறார். நீதிபதி கவாய் நவம்பர் மாதம் ஓய்வு பெற இருப்பதால், சுமார் ஆறு மாதங்கள் தலைமை நீதிபதியாக இருப்பார்.
நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு, இந்த பதவியை வகிக்கும் இரண்டாவது தலித் என்ற பெருமையைப் பெறுகிறார் நீதிபதி கவாய். தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி கவாயின் பெயரை அடுத்த தலைமை நீதிபதியாக பரிந்துரைத்துள்ளார்.
ஓய்வு பெறும் தலைமை நீதிபதி தனக்கு அடுத்து வருபவரின் பெயரை சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரைப்பது வழக்கம். அதன்படி, சஞ்சீவ் கண்ணா, கவாயின் பெயரை பரிந்துரைத்துள்ளார். நீதிபதி கவாய் மகாராஷ்டிராவின் அமராவதியைச் சேர்ந்தவர். 1985-ல் பார் கவுன்சிலில் சேர்ந்தார். ராஜா போன்சலேவுடன் பணியாற்றினார். ராஜா போன்சலே, மகாராஷ்டிரா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் மற்றும் நீதிபதி ஆவார்.

1987 முதல் 1990 வரை பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். பிறகு, பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் அரசியலமைப்பு மற்றும் நிர்வாகச் சட்டம் தொடர்பான வழக்குகளில் பணியாற்றினார். 1992 ஆகஸ்டில் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் உதவி அரசு வழக்கறிஞராகவும், கூடுதல் அரசு வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார். 2000-ல் நாக்பூர் கிளையின் அரசு வழக்கறிஞராகவும், பொது வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார்.
நீதிபதி கவாய் 2003-ல் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2005-ல் நிரந்தர நீதிபதியானார். 2019-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக, நீதிபதி கவாய் பல முக்கியமான தீர்ப்புகளைக் கொடுத்துள்ளார். 2016-ல் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை உறுதி செய்த தீர்ப்பு அவற்றில் ஒன்று. மேலும், தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று அறிவித்த பெஞ்ச்சிலும் அவர் பங்கேற்றுள்ளார்.
விஷால் விசிலும்.. விஷாலின் விளையாட்டுகள் 7
உலக சுகாதார தினம் .. ஆரோக்கியமே உண்மையான செல்வம்!
பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு செக்? 'விஜய்', 'ஜோசப்' பெயர்களில் 4 சுயேட்சைகள் போட்டி
TN Assembly Elections: தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026.. 7150 பேரின் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை
முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், விஜய் (பெரம்பூர்), நயினார் நாகேந்திரன் வேட்புமனு ஏற்பு
ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு குட்நியூஸ்...சென்னை போட்டியை மாற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி
Trisha: போதுமா.. இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா?.. வதந்திகளுக்கு த்ரிஷா கொடுத்த பதிலடி
கருப்பே பேரழகே!
என் ரதி எனக்கு கிடைக்க வரம் கேட்கிறேன்.. அவளின் (ல்) அவன்! (8)
{{comments.comment}}