டெல்லி: நீதியரசர் பூஷன் ராமகிருஷ்ண கவாய் மே 14-ம் தேதி இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக பதவி ஏற்கிறார்.
தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மே 13-ம் தேதி ஓய்வு பெறுகிறார். நீதிபதி கவாய் நவம்பர் மாதம் ஓய்வு பெற இருப்பதால், சுமார் ஆறு மாதங்கள் தலைமை நீதிபதியாக இருப்பார்.
நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு, இந்த பதவியை வகிக்கும் இரண்டாவது தலித் என்ற பெருமையைப் பெறுகிறார் நீதிபதி கவாய். தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி கவாயின் பெயரை அடுத்த தலைமை நீதிபதியாக பரிந்துரைத்துள்ளார்.
ஓய்வு பெறும் தலைமை நீதிபதி தனக்கு அடுத்து வருபவரின் பெயரை சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரைப்பது வழக்கம். அதன்படி, சஞ்சீவ் கண்ணா, கவாயின் பெயரை பரிந்துரைத்துள்ளார். நீதிபதி கவாய் மகாராஷ்டிராவின் அமராவதியைச் சேர்ந்தவர். 1985-ல் பார் கவுன்சிலில் சேர்ந்தார். ராஜா போன்சலேவுடன் பணியாற்றினார். ராஜா போன்சலே, மகாராஷ்டிரா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் மற்றும் நீதிபதி ஆவார்.
1987 முதல் 1990 வரை பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். பிறகு, பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் அரசியலமைப்பு மற்றும் நிர்வாகச் சட்டம் தொடர்பான வழக்குகளில் பணியாற்றினார். 1992 ஆகஸ்டில் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் உதவி அரசு வழக்கறிஞராகவும், கூடுதல் அரசு வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார். 2000-ல் நாக்பூர் கிளையின் அரசு வழக்கறிஞராகவும், பொது வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார்.
நீதிபதி கவாய் 2003-ல் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2005-ல் நிரந்தர நீதிபதியானார். 2019-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக, நீதிபதி கவாய் பல முக்கியமான தீர்ப்புகளைக் கொடுத்துள்ளார். 2016-ல் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை உறுதி செய்த தீர்ப்பு அவற்றில் ஒன்று. மேலும், தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று அறிவித்த பெஞ்ச்சிலும் அவர் பங்கேற்றுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாட்டில்.. இன்று மழையும், வெயிலும் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!
Real Life Dragon: டிராகன் பட பாணியில் விர்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம்!
{{comments.comment}}