கவி கலையின் இரு கவிதைகள்!

Apr 06, 2026,11:11 AM IST

- கவி.கலை


உள்ளம் தொடும் எழுத்துகள்!


கனவுலகில் வாழ்வதை விட 

கவிதையுலகில் வாழ்ந்து விடலாம் !  

கனவுலகில் தொடுதல் இல்லை . 

கவிதையுலகில் தொடுதல் உண்டு.  

அதனால்தான் எழுத்துகள் 

உள்ளம் தொடுகின்றனவோ? 


--


காகிதம் 




தினம் கருத்துக்கள் எழுதி 

கருத்தாய் காத்திடுவேன்,  

தினம் எண்ணுவோர் பையில் 

பணமாய் மாறிடுவேன், 

நிதம் பாலர்கள் கையில்  

பட்டமாய் பறந்திடுவேன்  

அணுதினம் ஆசை சொத்தினை  

ஆவணம் ஆக்கிடுவேன், 

பரிமாணங்கள் பல எடுத்து 

பயணித்த பின்னர்  

பாலான குப்பையாய்ப்  

பள்ளத்தில் வீசப்படும்  

காகிதம் ஆகிடுவேன்..!


(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்