கன மழை காரணமாக மூடப்பட்ட.. கலைஞர் நூற்றாண்டு பூங்கா.. இன்று முதல் மீண்டும் திறந்தாச்சு!

Oct 19, 2024,12:02 PM IST

சென்னை:   கனமழை காரணமாக சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவுக்கு நேற்று வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில்,  இன்று முதல் வழக்கம்போல் அது செயல்படுகிறது.


சென்னை கதீட்ரல் சாலையில் பல ஆண்டுகளாகத் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்துவந்த 6.09 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு, ரூ.46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிக பிரம்மாண்டமாக உலகத்தரத்திலான பூங்காவை தமிழ்நாடு அரசு உருவாக்கியது. இந்தப் பூங்காவில் இசை நீரூற்று, விளையாட்டுத்திடல், ஜிப்லைன் பயணம், கண்ணாடி மாளிகை, என பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பூங்காவுக்கு கலைஞர் நூற்றாண்டு பூங்கா எனப் பெயரிடப்பட்டது. 




கலைஞர் நூற்றாண்டு பூங்கா கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் பொதுமக்கள் பார்வைக்காக விடப்பட்டது. பூங்காவில் கட்டண சலுகை மிக அதிகமாக இருப்பதால் வசதி படைத்தவர்கள் மட்டுமே இதனை காண முடியும் என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வந்தனர்.  இதைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக கன முதல் அதிக கன மழை வரை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தண்ணீர் வடிய வழிவகை செய்யப்பட்டது.


இந்த கனமழை காரணமாக அக்டோபர் 15 முதல் 18 வரை கலைஞர் நூற்றாண்டு பூங்காவிற்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.  தறபோது மழை நின்று விட்டதால், கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று முதல் வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி,  இன்று முதல் கலைஞர் நூற்றாண்டு பூங்கா வழக்கம் போல் செயல்படும். இன்றும், நாளையும் விடுமுறை நாள் என்பதால் கூட்ட நெரிசலைத் தவிர்க்க   tnhorticulture.in என்ற இணையதளம் வாயிலாக பூங்காவிற்கான நுழைவு கட்டணத்தை பெறலாம் . பறவையகம் மற்றும் ஜிப்லைனிற்கு மாலை 4 மணி வரை மட்டுமே நுழைவுச்சீட்டு வழங்கப்படும். 


இசை நீரூற்றை பார்வையிட ஒரு நாளைக்கு 320 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதற்காக நுழைவுச்சீட்டு மாலை 4 மணி முதல் ஆறு மணி வரை இணையதளம் வாயிலாக  பெற்றுக்கொள்ளலாம். மாலை 6 மணி வரை மட்டுமே பொது நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்