கன மழை காரணமாக மூடப்பட்ட.. கலைஞர் நூற்றாண்டு பூங்கா.. இன்று முதல் மீண்டும் திறந்தாச்சு!

Oct 19, 2024,12:02 PM IST

சென்னை:   கனமழை காரணமாக சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவுக்கு நேற்று வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில்,  இன்று முதல் வழக்கம்போல் அது செயல்படுகிறது.


சென்னை கதீட்ரல் சாலையில் பல ஆண்டுகளாகத் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்துவந்த 6.09 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு, ரூ.46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிக பிரம்மாண்டமாக உலகத்தரத்திலான பூங்காவை தமிழ்நாடு அரசு உருவாக்கியது. இந்தப் பூங்காவில் இசை நீரூற்று, விளையாட்டுத்திடல், ஜிப்லைன் பயணம், கண்ணாடி மாளிகை, என பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பூங்காவுக்கு கலைஞர் நூற்றாண்டு பூங்கா எனப் பெயரிடப்பட்டது. 




கலைஞர் நூற்றாண்டு பூங்கா கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் பொதுமக்கள் பார்வைக்காக விடப்பட்டது. பூங்காவில் கட்டண சலுகை மிக அதிகமாக இருப்பதால் வசதி படைத்தவர்கள் மட்டுமே இதனை காண முடியும் என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வந்தனர்.  இதைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக கன முதல் அதிக கன மழை வரை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தண்ணீர் வடிய வழிவகை செய்யப்பட்டது.


இந்த கனமழை காரணமாக அக்டோபர் 15 முதல் 18 வரை கலைஞர் நூற்றாண்டு பூங்காவிற்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.  தறபோது மழை நின்று விட்டதால், கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று முதல் வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி,  இன்று முதல் கலைஞர் நூற்றாண்டு பூங்கா வழக்கம் போல் செயல்படும். இன்றும், நாளையும் விடுமுறை நாள் என்பதால் கூட்ட நெரிசலைத் தவிர்க்க   tnhorticulture.in என்ற இணையதளம் வாயிலாக பூங்காவிற்கான நுழைவு கட்டணத்தை பெறலாம் . பறவையகம் மற்றும் ஜிப்லைனிற்கு மாலை 4 மணி வரை மட்டுமே நுழைவுச்சீட்டு வழங்கப்படும். 


இசை நீரூற்றை பார்வையிட ஒரு நாளைக்கு 320 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதற்காக நுழைவுச்சீட்டு மாலை 4 மணி முதல் ஆறு மணி வரை இணையதளம் வாயிலாக  பெற்றுக்கொள்ளலாம். மாலை 6 மணி வரை மட்டுமே பொது நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்