கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. நாளை முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம்

Aug 17, 2023,05:01 PM IST
சென்னை:  கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை விண்ணப்பிக்காத குடும்ப தலைவிகள் நாளை முதல் மூன்று நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம் என்றும்  இதற்கான சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, குடும்ப தலைவிகளுக்கு மாதம் மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்குவோம் என்பது.  இந்தத் திட்டம் செப்டம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு, கடந்த மார்ச் மாதம் பட்ஜெட் உரையின்போது அறிவிக்கப்பட்டது.

    ‌‌


மகளிர் உரிமைத் தொகை யாருக்கு கிடைக்கும் என்ற நெறிமுறைகளை அரசு கடந்த ஜூன்  மாதம் வெளியிட்டது. அதன்படி  குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.50 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள், அரசு ஊழியர்கள், ஏற்கனவே முதியோர் தொகை வாங்கும் குடும்பம் ஆகியோர்க்கு மகளிர் உரிமைத் தொகை கிடையாது என்று அறிவிப்பில் வெளியானது.

இதன் அடிப்படையில் தகுதி உடையவர்கள் மட்டுமே ரேஷன் கடைகளில் உரிமத் திட்டகாண படிவத்தை பெற்று விண்ணப்பித்து வந்தனர். இந்த நிலையில், தற்போது நாளை முதல் மூன்று நாட்கள் விண்ணப்பிக்க தகுதியான பயனாளிகள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்