கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் - டோக்கன் விநியோகம் தொடங்கியது

Jul 20, 2023,09:27 AM IST
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் பெறுவதற்கான டோக்கன் விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் இந்த டோக்கன் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் வசதிக்காக வீடு வீடாக ரேஷன் கடை ஊழியர்கள் நேரிலேயே சென்று டோக்கன் வழங்கி வருகின்றனர். டோக்கன் பெற்றோர் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி ரேஷன் கடைகளில் தர வேண்டும்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்த முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று மகளிர் உரிமைத் தொகைத் திட்டம். இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக தனது வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றவுள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது. அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வருகிறது. அதற்கான டோக்கன் விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது. ரேஷன் ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் மற்றும் விண்ணப்பங்களை விநியோகிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்தப் பணிக்காக  தமிழ்நாடு முழுவதும் தன்னார்வலர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பத்தைப் பெற்று அதை நிரப்பி ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும். அதன் பின்னர் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்தவர்களுக்கு இந்த உரிமைத் தொகை வழங்கப்படும். அவர்களது வங்கிக் கணக்குகளிலேயே இது போடப்பட்டு விடும். வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு சிறப்பு முகாம்களிலேயே வங்கிக் கணக்கு திறந்து தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்