பேனா சின்னம் அமைக்கும் பணிகள் தொடங்கிருச்சு.. அமைச்சர் தகவல்!

Aug 02, 2023,12:37 PM IST
சென்னை : கடலுக்கு நடுவே கலைஞர் பேனா சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் துவங்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கிய பங்களிப்பை சிறப்பிக்கும் விதமாக சென்னை மெரீனாவில் இருந்து 360 மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் பேனா சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக பொதுப்பணித்துறை சார்பில் ரூ.81 கோடி ஒதுக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

134 அடி உயரத்தில் அமைக்கப்பட உள்ள இந்த பேனா வடிவ நினைவுச் சின்னத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடலுக்கு நடுவே பேனா சின்னம் அமைப்பதை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டன. 

ஆனால் திமுக.,வின் தொடர் முயற்சிக்கு பிறகு மத்திய சுற்றுச்சூழல் துறை பல நிபந்தனைகளுடன் பேனா சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் பேனா நிவைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டது. இரண்டாம் கட்ட பணிகள் முதல்வரின் அனுமதி பெற்ற பிறகு விரைவில் துவங்கப்படும் என்றார். அதோடு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்