பேனா சின்னம் அமைக்கும் பணிகள் தொடங்கிருச்சு.. அமைச்சர் தகவல்!

Aug 02, 2023,12:37 PM IST
சென்னை : கடலுக்கு நடுவே கலைஞர் பேனா சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் துவங்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கிய பங்களிப்பை சிறப்பிக்கும் விதமாக சென்னை மெரீனாவில் இருந்து 360 மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் பேனா சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக பொதுப்பணித்துறை சார்பில் ரூ.81 கோடி ஒதுக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

134 அடி உயரத்தில் அமைக்கப்பட உள்ள இந்த பேனா வடிவ நினைவுச் சின்னத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடலுக்கு நடுவே பேனா சின்னம் அமைப்பதை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டன. 

ஆனால் திமுக.,வின் தொடர் முயற்சிக்கு பிறகு மத்திய சுற்றுச்சூழல் துறை பல நிபந்தனைகளுடன் பேனா சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் பேனா நிவைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டது. இரண்டாம் கட்ட பணிகள் முதல்வரின் அனுமதி பெற்ற பிறகு விரைவில் துவங்கப்படும் என்றார். அதோடு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

அதிகம் பார்க்கும் செய்திகள்