ரஜினிகாந்த்திடம்.. கலைஞர் நினைவு ரூ. 100 நாணயத்தை நேரில் வழங்கிய.. பூச்சி முருகன்!

Aug 22, 2024,01:24 PM IST

சென்னை:   நடிகர் ரஜினிகாந்திற்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வழங்கப்பட்டது. இதனை திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு சென்று நேரில் வழங்கினார். 


மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவின் நினைவாக 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. இந்த நாணயத்தை கடந்த 18ம் தேதி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை கலைவாணர் அரங்கில் வெளியிட்டார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெழுத்திட்டு நாணயத்திற்கான அனுமதி வழங்கியுள்ளார். இந்த நாணயம் திமுக தலைமை நிலையமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு நாணயம் 10,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.




கலைஞர் படம் பொறித்த நாணயம் என்பதால், திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் ஆர்வமுடன் வங்கிச் செல்கின்றனர். ஆகஸ்ட் 20ம் தேதி மட்டும் 500 நாணயங்கள் 50 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இந்த நாணயங்களை திமுக கட்சியினர் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி வருகின்றனர்.


இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க கருணாநிதி நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை நடிகர் ரஜினிகாந்திடம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன் ரஜினிகாந்தின் இல்லத்தில் சென்று வழங்கியுள்ளார். நடிகர் ரஜினியும் அந்த நாணயத்தை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

news

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

அதிகம் பார்க்கும் செய்திகள்