சென்னை: நடிகர் ரஜினிகாந்திற்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வழங்கப்பட்டது. இதனை திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு சென்று நேரில் வழங்கினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவின் நினைவாக 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. இந்த நாணயத்தை கடந்த 18ம் தேதி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை கலைவாணர் அரங்கில் வெளியிட்டார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெழுத்திட்டு நாணயத்திற்கான அனுமதி வழங்கியுள்ளார். இந்த நாணயம் திமுக தலைமை நிலையமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு நாணயம் 10,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கலைஞர் படம் பொறித்த நாணயம் என்பதால், திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் ஆர்வமுடன் வங்கிச் செல்கின்றனர். ஆகஸ்ட் 20ம் தேதி மட்டும் 500 நாணயங்கள் 50 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இந்த நாணயங்களை திமுக கட்சியினர் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க கருணாநிதி நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை நடிகர் ரஜினிகாந்திடம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன் ரஜினிகாந்தின் இல்லத்தில் சென்று வழங்கியுள்ளார். நடிகர் ரஜினியும் அந்த நாணயத்தை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}