- கலைவாணி ராமு
அன்று அடுப்பங்கரையை அலங்கரித்தார்கள்,
அதில் சில வீரமங்கைகள் ஆண்டும் வந்தார்கள்!
இன்று அனைத்துத் துறைகளிலும் தங்களை
இணைத்துக்கொண்டு, நிரூபித்தும் காட்டுகிறார்கள்!
அன்பு காட்டுவதில் அன்னிபெசன்ட் அம்மையாராய்,
அனைவரையும் அரவணைப்பதில் அன்னை தெரசாவாய்,
பாரதத்தை ஆள்வதில் இந்திரா காந்தியாய்,
ஈடில்லாப் புகழ் சூடுவதில் கஸ்தூரிபாய் காந்தியாய்,
உள்ளம் நிறைந்த விண்மீன் கல்பனா சாவ்லாவாய்,
ஊர் போற்றும் படி வாழ்ந்த ராணி மங்கம்மாளாய்,

உயர்வான எண்ணம் கொண்ட சரோஜினி நாயுடுவாய்,
ஏற்றமிகு வாழ்க்கை வாழ்ந்த எலிசபெத் ராணியாய்,
ஐம்புலன் அடக்கி ஆளும் கமலா நேருவாய்,
ஒற்றுமைக்கு வித்திட்ட பாத்திமா பீவியாய்,
ஓயாமல் உழைப்பதில் தீரம் மிக்க கிரண் பேடியாய்,
வையகம் போற்றிப் புகழும் ஔவையாரைப் போல,
ஆளப்பிறந்தவர்களாய் நாமும் வாழ்ந்து காட்டுவோம்!
நம்முடன் வாழும் கலியுகப் பெண்ணான ரத்தினம்மா போல்,
அனைத்துப் பெண்களின் விடிவெள்ளியாய் ஒளி வீசுவோம்!
இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்!
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}