ஆளப்பிறந்தவள்!

Mar 08, 2026,02:04 PM IST

- கலைவாணி ராமு


அன்று அடுப்பங்கரையை அலங்கரித்தார்கள்,

அதில் சில வீரமங்கைகள் ஆண்டும் வந்தார்கள்!

இன்று அனைத்துத் துறைகளிலும் தங்களை

இணைத்துக்கொண்டு, நிரூபித்தும் காட்டுகிறார்கள்!


அன்பு காட்டுவதில் அன்னிபெசன்ட் அம்மையாராய்,

அனைவரையும் அரவணைப்பதில் அன்னை தெரசாவாய்,

பாரதத்தை ஆள்வதில் இந்திரா காந்தியாய்,

ஈடில்லாப் புகழ் சூடுவதில் கஸ்தூரிபாய் காந்தியாய்,

உள்ளம் நிறைந்த விண்மீன் கல்பனா சாவ்லாவாய்,

ஊர் போற்றும் படி வாழ்ந்த ராணி மங்கம்மாளாய்,




உயர்வான எண்ணம் கொண்ட சரோஜினி நாயுடுவாய்,

ஏற்றமிகு வாழ்க்கை வாழ்ந்த எலிசபெத் ராணியாய்,

ஐம்புலன் அடக்கி ஆளும் கமலா நேருவாய்,

ஒற்றுமைக்கு வித்திட்ட பாத்திமா பீவியாய்,

ஓயாமல் உழைப்பதில் தீரம் மிக்க கிரண் பேடியாய்,

வையகம் போற்றிப் புகழும் ஔவையாரைப் போல,

ஆளப்பிறந்தவர்களாய் நாமும் வாழ்ந்து காட்டுவோம்!


நம்முடன் வாழும் கலியுகப் பெண்ணான ரத்தினம்மா போல்,

அனைத்துப் பெண்களின் விடிவெள்ளியாய் ஒளி வீசுவோம்!

இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜனநாயகக் கடமையாற்ற வேண்டிய நாள்.. உங்கள் வாக்கை தவறாமல் பதிவு செய்யுங்கள்!

news

யாசகத்தோழி!

news

வெளியில் புன்னகைத்து.. உள்ளுக்குள் கனன்றுகொண்டிருக்கும்.. நெருப்புக் குழம்பிற்குச் சொந்தக்காரி!

news

பஹல்காம் பரிதாபம்.. சிந்தூரைப் பார்த்து சினம் கொண்டவனை சிந்தூர் சாய்த்தது!

news

சிந்தனைச் சிதறல்.. ஒருவருக்கு தவறெனத் தோன்றுவது மற்றவருக்கு சரியெனத் தோன்றுகிறது!

news

Fermented rice: பழைய சோறு.. வெயில் வந்தாலே.. இதுவும் நம்மை நாடி வந்து விடும்!

news

Housewives எல்லாம் சும்மா இல்லைங்க.. அவர்கள் பாராட்டப்படாத உழைப்பாளிகள்!

news

Deepa Ravi Poem: உன் அருகில் நான் அமர்ந்தால்.. என் மனமோ!

news

World Earth Day: உயிர்க்கோளம் பூமி .. இறைவன் நமக்கு கொடுத்த வரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்