- சுமதி சிவக்குமார்
கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு அரசு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு இன்று நேர்காணல் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டமும் அமலில் உள்ளது.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம்1.00 மணி வரை ஸ்மார்ட் ஃபோன் வழங்குவதற்கான நேர்காணல் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளும் இதில் கலந்து கொள்ளலாம். இதற்கு வேண்டிய ஆவணங்கள் மாற்றுத் திறனாளிகளின் யூ. டி. ஐ. டி. ஸ்மார்ட் கார்டு. அது இல்லாதவர்கள் மாற்றுத் திறனாளி அடையாள அட்டை, மருத்துவ சான்றிதழ், புகைப்படம் இரண்டு, இவையெல்லாம் தயாராக கொண்டு சென்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
(சுமதி சிவக்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
இந்திய வரலாற்றில் தடம் பதித்த பெண் ஆளுமைகள்.. வரலாறு அறிவோம்!
குவைத் விமான நிலையத்தைக் குறி வைத்த ஈரான்.. எரிபொருள் டேங்கர்கள் பெரும் சேதம்
பெண்களை மதித்த.. போற்றிய.. கொண்டாடிய.. முண்டாசுக் கவிஞனுக்கு நன்றி சொல்வோம்!
யோசனை செய்!!
லட்சியக் கனவை முன்னின்று நிறைவேற்றப் போவது நீங்கதான்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து
அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. நீங்க யாரும் ஹர்ட் ஆகாதீங்க.. தவெக தலைவர் விஜய்
கோவையை அதிர வைத்த.. மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 3 பேருக்கும் சாகும் வரை சிறைத் தண்டனை!
தமிழக சட்டசபை தேர்தல் 2026 விஐபி தொகுதிகள்...எந்த தொகுதியில் யார் போட்டியிட வாய்ப்பு?
இந்தியா உதவியது ஏன்?... வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
{{comments.comment}}