- சுமதி சிவக்குமார்
கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு அரசு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு இன்று நேர்காணல் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டமும் அமலில் உள்ளது.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம்1.00 மணி வரை ஸ்மார்ட் ஃபோன் வழங்குவதற்கான நேர்காணல் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளும் இதில் கலந்து கொள்ளலாம். இதற்கு வேண்டிய ஆவணங்கள் மாற்றுத் திறனாளிகளின் யூ. டி. ஐ. டி. ஸ்மார்ட் கார்டு. அது இல்லாதவர்கள் மாற்றுத் திறனாளி அடையாள அட்டை, மருத்துவ சான்றிதழ், புகைப்படம் இரண்டு, இவையெல்லாம் தயாராக கொண்டு சென்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
(சுமதி சிவக்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
வெளியில் புன்னகைத்து.. உள்ளுக்குள் கனன்றுகொண்டிருக்கும்.. நெருப்புக் குழம்பிற்குச் சொந்தக்காரி!
யாசகத்தோழி!
ஜனநாயகக் கடமையாற்ற வேண்டிய நாள்.. உங்கள் வாக்கை தவறாமல் பதிவு செய்யுங்கள்!
பஹல்காம் பரிதாபம்.. சிந்தூரைப் பார்த்து சினம் கொண்டவனை சிந்தூர் சாய்த்தது!
சிந்தனைச் சிதறல்.. ஒருவருக்கு தவறெனத் தோன்றுவது மற்றவருக்கு சரியெனத் தோன்றுகிறது!
Fermented rice: பழைய சோறு.. வெயில் வந்தாலே.. இதுவும் நம்மை நாடி வந்து விடும்!
World Earth Day: உயிர்க்கோளம் பூமி .. இறைவன் நமக்கு கொடுத்த வரம்!
பூமி தினம்
World Earthday.. பூமியைக் கொண்டாடுவோம்.. பாதுகாப்பாக காத்திருப்போம்!
{{comments.comment}}