சென்னை: நாடாளுமன்ற மாநிலங்களவை எம்பியாக பதவியேற்கவுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றும் ஒரு அரிய வாய்ப்பை அவர் உருவாக்கியுள்ளார். அதாவது கமல்ஹாசனின் அலுவலகத்தில் ஆய்வு இன்டன்ஷிப்புக்கு ஆட்கள் தேவை என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். விரைவில் அவர் பதவியேற்கவுள்ளார். அவரது அடுத்த கட்ட அரசியல் டெல்லியில் முகாமிடவுள்ளது. தமிழ்நாட்டில் புயலைக் கிளப்பியது போல நாடாளுமன்றத்திலும் அவர் அனலைப் பரப்புவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் தனது அரசியல் செயல்பாடுகள், நாடாளுமன்ற செயல்பாடுகளை சிறப்பாக திட்டமிட கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். இதனால் தனக்குத் தேவையான புள்ளிவிவரங்கள், தரவுகள் உள்ளிட்டவற்றைத் திரட்டவும் தனக்கு தேவையான உதவிகளைப் பெறவும் அவர் இன்டர்ன்ஷிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லி, சென்னையில் இதற்காக தனித் தனி டீம்களை அவர் உருவாக்கியுள்ளார். அந்தக் குழுவினருடன் இணைந்து இன்டன்ஷிப்புக்கு தேர்வாகும் இளைஞர் பட்டாளம் செயல்படும்.
இதற்காக பொதுக் கொள்கை வகுப்பு, ஆட்சிமுறை, நாடாளுமன்ற பணிகள் உள்ளிட்டவற்றில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு கமல்ஹாசனின் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த பயிற்சியானது ஊதியத்துடன் கூடியது. 2 முதல் 6 மாத காலம் பயிற்சி இருக்கும். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சட்டம், இதழியல் உள்ளிட்ட ஏதாவது ஒரு தலைப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு மாணவர்களும் கூட விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி மொழியாக ஆங்கிலம் மற்றும் தமிழ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கூகுள் பார்மில் போய் விண்ணப்பிக்கலாம்: https://lnkd.in/gVrfUcdy
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}