சென்னை: நாடாளுமன்ற மாநிலங்களவை எம்பியாக பதவியேற்கவுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றும் ஒரு அரிய வாய்ப்பை அவர் உருவாக்கியுள்ளார். அதாவது கமல்ஹாசனின் அலுவலகத்தில் ஆய்வு இன்டன்ஷிப்புக்கு ஆட்கள் தேவை என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். விரைவில் அவர் பதவியேற்கவுள்ளார். அவரது அடுத்த கட்ட அரசியல் டெல்லியில் முகாமிடவுள்ளது. தமிழ்நாட்டில் புயலைக் கிளப்பியது போல நாடாளுமன்றத்திலும் அவர் அனலைப் பரப்புவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் தனது அரசியல் செயல்பாடுகள், நாடாளுமன்ற செயல்பாடுகளை சிறப்பாக திட்டமிட கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். இதனால் தனக்குத் தேவையான புள்ளிவிவரங்கள், தரவுகள் உள்ளிட்டவற்றைத் திரட்டவும் தனக்கு தேவையான உதவிகளைப் பெறவும் அவர் இன்டர்ன்ஷிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லி, சென்னையில் இதற்காக தனித் தனி டீம்களை அவர் உருவாக்கியுள்ளார். அந்தக் குழுவினருடன் இணைந்து இன்டன்ஷிப்புக்கு தேர்வாகும் இளைஞர் பட்டாளம் செயல்படும்.
இதற்காக பொதுக் கொள்கை வகுப்பு, ஆட்சிமுறை, நாடாளுமன்ற பணிகள் உள்ளிட்டவற்றில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு கமல்ஹாசனின் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த பயிற்சியானது ஊதியத்துடன் கூடியது. 2 முதல் 6 மாத காலம் பயிற்சி இருக்கும். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சட்டம், இதழியல் உள்ளிட்ட ஏதாவது ஒரு தலைப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு மாணவர்களும் கூட விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி மொழியாக ஆங்கிலம் மற்றும் தமிழ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கூகுள் பார்மில் போய் விண்ணப்பிக்கலாம்: https://lnkd.in/gVrfUcdy
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}