காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நேற்று ரவுடி பிரபா என்பவரை ஓட ஓட வெட்டிக் கொன்ற 2 ரவுடிகள் இன்று அதிகாலை போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் அருகே உள்ள பல்லவன் மேடு பகுதியை சேர்ந்தவர் பிரபா என்கிற பிரபாகரன். அப்பகுதியில் ஹிஸ்டரி ஷீட்டராக வலம் வந்த ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை, திருட்டு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தேமுதிக நிர்வாகி சரவணன் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்திருந்த பிரபாகரனை நேற்று ஒரு கும்பல் காரில் வந்து மடக்கியது. அவர்களில் இருவர் காரை விட்டு இறங்கி பிரபாவை வெட்ட ஆரம்பித்தனர். இதனால் பிரபா உயிர் தப்ப ஓடினார். அவர்கள் விடவில்லை. துரத்திப் பிடித்து மடக்கி சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டு தப்பி விட்டனர்.

பட்டப்பகலில் இச்சம்பவம் நடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பிரபாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாலையில் நடந்த என்கவுண்டர்
இந்த கொலை தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். பிரபாகரன் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் புதிய ரயில் நிலையம் அருகே பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.

புதிய ரயில் நிலையம் அருகே இந்திரா நகர் சர்வீஸ் சாலையில் பதுங்கி இருந்த ரவுடிகளை காவல்துறையினர் பிடிக்க முற்பட்டனர். அப்போது, ரவுடிகள் காவல்துறையினரை தாக்கி விட்டு தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ரவுடிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், ரவுடிகள் ரகுரவன், கருப்பு அசேன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிலர் தப்பி ஓடி விட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடிகளின் கூட்டாளிகள் 7 பேரை தற்போது போலீஸார் தேடி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தை டிஐஜி பொன்னி நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தில் 2 போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் டிஐஜி பொன்னி நேரில் பார்த்து நலம் விசாரித்தார்.
காஞ்சிபுரம் பகுதியில் 300க்கும் மேற்பட்ட ஹிஸ்டரி ஷீட்டர்கள் இருப்பதாக கூறிய டிஐஜி பொன்னி, ரவுடி பிரபா கொலை வழக்கில் மேலும் 2 பேரைத் தேடி வருவதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!
திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!
மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்
பாமக ராமதாஸ் கையெழுத்தே பொய்யா? பகீர் கிளப்பிய வக்கீல்... என்னதான் நடக்கிறது?
தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!
த.வெ.க நிர்வாகிகள் கூட்டம்... பொதுமக்களுக்கு அனுமதியில்லை... காவல்துறை அறிவிப்பு!
இந்தியா பாகிஸ்தான் மோதலும்.. வரிவிதிப்பை "டிரம்ப் கார்டாக" பயன்படுத்தினாரா அமெரிக்க அதிபர்?
எனக்கு வாசனையும் தெரியாது, சுவையும் தெரியாது : மம்முட்டி ஓபன் டாக்!
{{comments.comment}}