சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தில் தொகுப்பாளராக (எடிட்டர்) பணிபுரிந்த நிஷாத் யூசுப் மர்மமான முறையில் இன்று உயிரிழந்துள்ளார்.
ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் கங்குவா .இப்படத்தை சிவா இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியாக தயாராகியுள்ளது. படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
படம் வெளிவர இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தற்போது பட புரமோஷன் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் இன்று உயிரிழந்துள்ளார். 43 வயதான இவர் இன்று காலையில் கொச்சி அருகே பணம்பள்ளியில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நிஷாத் யூசுப் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிஷாத், இன்று அதிகாலை 2 மணி அளவில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கங்குவா படம் வெளியாகும் முன்பே எடிட்டர் நிஷாத் யூசுப் மரணம் நடந்திருப்பது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த நிஷாத், மலையாள சூப்பர் ஸ்டார்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி நடித்து வரும் படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு தள்ளுமலா என்ற படத்திற்காக கேரள அரசின் சிறந்த எடிட்டர் விருதினை பெற்றவர் என்பது நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}