பிரமாண்டமாக வெளியானது கங்குவா.. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன்.. ரசிகர்கள் ஹேப்பி!

Nov 14, 2024,11:53 AM IST

சென்னை: ரசிகர்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. இதனை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்று கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.


எதற்கும் துணிந்தவன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் கமிட்டானார். இப்படம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு செட்டுகளிலும் 3d எஃபக்ட்டுடன் படமாக்கப்பட்டு வந்தது. தமிழில் முதன் முதலாக பெரும் பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது இந்த கங்குவா திரைப்படம்.


இதில் நடிகர் சூர்யா பல்வேறு கெட்டப்புகளில் வலம் வரும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பேராதரவை பெற்றது. இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா மிரட்டலாக நடித்திருக்கிறார். ஜோடியாக திஷா பட்டானி நடித்துள்ளார். மேலும் இந்திய நடிகர்கள்  இதுவரை கண்டிராத புது விதமான திரைக்கதை, பிரம்மாண்டம் என  இப்படத்தில் பல்வேறு ஆச்சரியங்கள் காத்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன. அதேபோல் பாலிவுட் ஆக்டர் பாபி தியோல் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 




இப்படி இப்படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி படத்தின் பிரம்மாண்டம் குறித்தும், படத்தின் கதை களம் குறித்தும்  ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மேன்மேலும் எகிற வைத்து வந்தது. இதற்கிடையே கங்குவா திரைப்படம் தீபாவளி முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அப்போது வேட்டையான் குறுக்கே புகுந்ததால் பட வெளியீட்டை நவம்பர் 14ஆம் தேதி தள்ளி வைத்து இன்று படம் வெளியானது. படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்தை கொண்டாடுவதற்கு ரசிகர்கள் தயாராகி வந்தனர்.


இந்த நிலையில் உலகம் முழுவதும் 11,500  திரையரங்குகளில் இன்று கங்குவா திரைப்படம் வெளியாகி உள்ளது. அதாவது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, என அனைத்து மொழிகளிலும் இன்று வெளியாகி உள்ளது. தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் அதிகாலையிலேயே கங்குவா வெளியானது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு படம் வெளியானது.  சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்திற்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து இன்று தான் கங்குவா திரைப்படம் வெளியாகி இருப்பதால், முதல் காட்சியை பார்ப்பதற்கு தியேட்டர்களில் சூர்யா ரசிகர்கள் திரண்டு, படத்தை கொண்டாடி தங்களின் பேராதரவை அளித்து வருகின்றனர். 


சென்னையில் காசி திரையரங்கு முன்பு சூர்யா ரசிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, அங்கு வைக்கப்பட்ட பேனர்களுக்கு ராட்சத மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்து, மேளம் தாளம் முழங்க வெடி வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். அதே சமயத்தில் ரசிகர்களோடு இணைந்து கங்குவா திரைப்படத்தை கண்டு ரசிப்பதற்காக  இயக்குனர் சிறுத்தை சிவாவும் படக்குழுவினரும் இந்த திரையரங்கத்திற்கு வந்திருந்தனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இனி அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது: டாக்டர் ராமதாஸ் போட்ட கண்டிஷன்!

news

புதுச்சேரி துணை நிலை ஆளுநருடன் மோதல்.. சமாதானமானார் முதல்வர் என். ரங்கசாமி!

news

மதுரையில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல்: சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா.. 29 தெலுங்கு நடிகர், நடிகைகள் மீது வழக்கு

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

தமிழக வெற்றிக் கழகம் என்று படகுகளில் எழுதினால் மானியம் மறுப்பதா.. விஜய் கண்டனம்

news

அதிமுகவை மீட்க முடியாதவர் பழனிச்சாமி தமிழகத்தை மீட்பேன் என்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

எதிர்க்கட்சித் தலைவர் சங்கிகள்... எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசித்து வருகிறார்: அமைச்சர் சேகர்பாபு

news

புதுப் புது வரலாறு படைக்கக் காத்திருக்கும் சுப்மன் கில்.. 4 உலக சாதனைகளுக்கு ஆபத்து!

அதிகம் பார்க்கும் செய்திகள்