பெங்களூரு: கன்னடத்தின் முதல் செயற்கை நுண்ணறிவு நியூஸ் ரீடர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கர்நாடகத்து பவர் டிவியின் "செளந்தர்யா". கன்னட டிவி சானலான பவர் டிவியின் முதல் ரோபோட் ஆங்கர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் செளந்தர்யா.
எல்லாத் துறையிலும் தற்போது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் புகுந்து விளையாடத் தொடங்கி விட்டது. எது நிஜம், எது நிழல் என்றே தெரியாத அளவுக்கு இந்தத் தொழில்நுட்பம் அனைவரின் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது.
வட இந்தியாவில் நியூஸ் சானல்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பெரிய அளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். பல செயற்கை நுண்ணறிவு நியூஸ் ரீடர்களை அவர்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அது தற்போது தென்னிந்தியாவுக்கும் பரவத் தொடங்கியுள்ளது.
கன்னடத்தில் வெளியாகும் பவர் டிவியில் செளந்தர்யா என்ற செயற்கை நுண்ணறிவு நியூஸ் ரீடரை அறிமுகப்படுத்தியுள்ளனர். அது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும் மலையாளம் மற்றும் தெலுங்கு நியூஸ் சானல்கள் பலவற்றில் இதே போல ஏற்கனவே முயற்சிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
செளந்தர்யாவுக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது இன்னொரு கன்னட நியூஸ் சானலில் மாயா என்ற செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
தமிழில் இது எப்போது வரும் என்று தெரியவில்லை. ஆனால் சீக்கிரமே வந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஒரு காலத்தில் ஷோபனா ரவியின் அழகான தமிழ் உச்சரிப்பை பார்த்து மெய் மறந்து போயிருந்தோம���.. செய்தி வாசிப்பை கேட்பது ஒரு சுகானுபவமாக இருந்தது. மீண்டும் அதேபோன்ற காலத்தை இந்த செயற்கை நுண்ணறிவு தருமா.. காத்திருந்து பார்ப்போம்.
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!
ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?
{{comments.comment}}