பெங்களூரு: கன்னடத்தின் முதல் செயற்கை நுண்ணறிவு நியூஸ் ரீடர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கர்நாடகத்து பவர் டிவியின் "செளந்தர்யா". கன்னட டிவி சானலான பவர் டிவியின் முதல் ரோபோட் ஆங்கர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் செளந்தர்யா.
எல்லாத் துறையிலும் தற்போது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் புகுந்து விளையாடத் தொடங்கி விட்டது. எது நிஜம், எது நிழல் என்றே தெரியாத அளவுக்கு இந்தத் தொழில்நுட்பம் அனைவரின் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது.
வட இந்தியாவில் நியூஸ் சானல்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பெரிய அளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். பல செயற்கை நுண்ணறிவு நியூஸ் ரீடர்களை அவர்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அது தற்போது தென்னிந்தியாவுக்கும் பரவத் தொடங்கியுள்ளது.
கன்னடத்தில் வெளியாகும் பவர் டிவியில் செளந்தர்யா என்ற செயற்கை நுண்ணறிவு நியூஸ் ரீடரை அறிமுகப்படுத்தியுள்ளனர். அது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும் மலையாளம் மற்றும் தெலுங்கு நியூஸ் சானல்கள் பலவற்றில் இதே போல ஏற்கனவே முயற்சிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
செளந்தர்யாவுக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது இன்னொரு கன்னட நியூஸ் சானலில் மாயா என்ற செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
தமிழில் இது எப்போது வரும் என்று தெரியவில்லை. ஆனால் சீக்கிரமே வந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஒரு காலத்தில் ஷோபனா ரவியின் அழகான தமிழ் உச்சரிப்பை பார்த்து மெய் மறந்து போயிருந்தோம���.. செய்தி வாசிப்பை கேட்பது ஒரு சுகானுபவமாக இருந்தது. மீண்டும் அதேபோன்ற காலத்தை இந்த செயற்கை நுண்ணறிவு தருமா.. காத்திருந்து பார்ப்போம்.
எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?
விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு
நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்
உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!
செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!
பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!
Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?
பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!
சரியான முடிவு
{{comments.comment}}