சென்னை: தமிழ்நாட்டில் கன்னியாகுமரி உள்ளிட்ட 7 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டு அதுதொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மக்கள் தொகை பெருகி வருகிறது. நகரமயமாக்கலும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தேவையான மாற்றங்களை அரசு செய்து வருகிறது. புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளை அரசு உருவாக்கி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது 7 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டு அதற்கான அரசாணைகள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, போளூர், செங்கம், கன்னியாகுமரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, சங்ககிரி ஆகிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று வருகிறார். அப்போது புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். அந்த வகையில் கன்னியாகுமரியில் கடந்த டிசம்பர் மாதம் அவர் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாா நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்தபோது கன்னியாகுமரி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். தற்போது அதற்கான அரசாணை வந்து விட்டது.
இவை மட்டுமல்லாமல், கவுந்தம்பாடி, அரூர், சூலூர், மோகனூர், நார வாரி குப்பம், வேப்பம்பட்டு ஆகிய நகராட்சிகளும் விரைவில் உருவாக்கப்படவுள்ளன. ஏற்கனவே சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநகராட்சிகள் எல்லைகள் விரிவாக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்பது நினைவிருக்கலாம்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}