சென்னை: தமிழ்நாட்டில் கன்னியாகுமரி உள்ளிட்ட 7 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டு அதுதொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மக்கள் தொகை பெருகி வருகிறது. நகரமயமாக்கலும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தேவையான மாற்றங்களை அரசு செய்து வருகிறது. புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளை அரசு உருவாக்கி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது 7 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டு அதற்கான அரசாணைகள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, போளூர், செங்கம், கன்னியாகுமரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, சங்ககிரி ஆகிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று வருகிறார். அப்போது புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். அந்த வகையில் கன்னியாகுமரியில் கடந்த டிசம்பர் மாதம் அவர் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாா நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்தபோது கன்னியாகுமரி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். தற்போது அதற்கான அரசாணை வந்து விட்டது.
இவை மட்டுமல்லாமல், கவுந்தம்பாடி, அரூர், சூலூர், மோகனூர், நார வாரி குப்பம், வேப்பம்பட்டு ஆகிய நகராட்சிகளும் விரைவில் உருவாக்கப்படவுள்ளன. ஏற்கனவே சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநகராட்சிகள் எல்லைகள் விரிவாக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்பது நினைவிருக்கலாம்.
தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை... வெள்ளியின் விலையும் சற்று குறைவு தான்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
கண்ணீரைத் துடைக்க.. இறைவனே இறங்கி வந்து நிற்பான்!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
புட்டு சாப்பிட்டிருப்பீங்க.. முள்ளங்கி புட்டு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா.. செமத்தியான டிஷ்!
வைகறை அழகு.. அந்திபொழுது அழகு.. கறவைகளுடன்.. சேயுமழகு!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 13, 2025... இன்று முயற்சிகள் கைகொடுக்கும்
டெல்லியிலும், சுற்று வட்டாரத்திலும்.. விடிஞ்சு வந்து பார்த்தா.. ஒரே smog.. இயல்பு நிலை பாதிப்பு
{{comments.comment}}