காரைக்கால்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 10 பேரை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை.
இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்கே சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இந்தியா வந்திருந்தார். அப்போது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என கூறியிருந்தனர். ஆனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.

அந்த வகையில் நேற்று நாகையில் இருந்து காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்து வந்த இலங்கை கடற்படையினர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் 10 பேரையும் அவர்கள் வைத்திருந்த விசைப்படகு ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேஷன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஜனநாயகன் பட விவகாரம்... விஜய்க்கு ஆதரவாக.. சினிமா, அரசியல் துறையில் உரத்து ஒலிக்கும் குரல்கள்!
மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது...ஜனநாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் காங்கிரஸ்
தவெக தனித்து போட்டியா? கூட்டணியா?... ரகசியத்தை உடைத்த கிரிஷ் சோடங்கர்
அமலாக்கத்துறை ரெய்டு என்ற பெயரில் டேட்டாக்களை திருடுகிறார்கள்...மம்தா பகீர் குற்றச்சாட்டு
'பழைய ஓய்வூதிய திட்டமே நிரந்தர தீர்வு': தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை
சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி: உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல்
தமிழக சட்டசபை தேர்தல் 2026...நாம் தமிழர் கட்சிக்கு டஃப் கொடுக்க போவது யார்?
கூட்டணி அமைப்பதற்கே திண்டாட்டம்...அதிமுக கூட்டணி பற்றி திருமாவளவன் கிண்டல்
விஜய்யின் ஜனநாயகன் படம் அவரது அரசியலுக்கு உதவுமா? மக்கள் ஆதரவை பெருக்குமா?
{{comments.comment}}