ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் அபார வெற்றி பெற்று காங்கிரஸிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய பாஜகவுக்கு, கரன்பூர் இடைத் தேர்தலில் மக்கள் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்.
ராஜஸ்தான் சட்டசபைக்கு சில மாதங்களுக்கு முன்புதான் பொதுத் தேர்தல் நடந்தது. அதில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் காலி செய்து விட்டு பாஜக அபார வெற்றி பெற்றது. 199 இடங்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில் 115 இடங்களை பாஜக வென்றிருந்தது. அந்தத் தேர்தலில் கரன்பூர் தொகுதியில் குர்மீத் சிங் கூனார் என்பவர் போட்டியிட்டு வென்றிருந்தார். இந்த நிலையில் திடீரென கூனார் மரணமடைந்தார். இதையடுத்து அந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ரூபிந்தர் சிங் கூனார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்குப் போட்டியாக சுரேந்திர பால் சிங் என்பவர் பாஜக சார்பில் போட்டியிட்டார். இவர் அமைச்சராக இருக்கிறார். எம்எல்ஏவாக இல்லாத நிலையில் சுரேந்தரி பால் சிங்கை இந்த இடைத் தேர்தலில் பாஜக நிறுத்தியது. எப்படியாவது அவர் ஜெயித்து விடுவார் என்று பாஜக நம்பிக்கையுடன் இருந்தது.
ஆனால் மக்கள் கூனார் மீது வைத்துள்ள விசுவாசத்தை காட்டி விட்டனர். ரூபிந்தர் சிங் கூனார் இடைத் தேர்தலில் 11,283 வாக்குகள் வித்தியாசத்தில் சுரேந்திர பால் சிங்கைத் தோற்கடித்து வெற்றி வாகை சூடி விட்டார். கூனாருக்கு 94,950 வாக்குகளும், அமைச்சர் சுரேந்தர் பால் சிங்குக்கு 83,667 வாக்குகளும் கிடைத்தன.
இந்த வெற்றி காங்கிரஸ் கட்சியை உற்சாகத்தில் மூழ்கடித்துள்ளது. கூனார் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் கூறுகையில், கரன்பூர் மக்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அமைச்சர்கள் வந்து எனக்கு எதிராகப் பிரசாரம் செய்தனர். ஆனால் அவர்களை மக்கள் நிராகரித்து விட்டனர். ஜனநாயகம் வென்றது என்று கூறியுள்ளார்.
திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல சில உள்ளங்களை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஜூன் 21, 22 சென்னை எழும்பூர் டூ திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
22ம் தேதி முருகனை கையில் எடுப்பது போல் 2026ல் தமிழகத்தை கையில் எடுப்போம்: நயினார் நாகேந்திரன்
சுப்ரீம் கோர்ட்டே சொல்லிடுச்சு... தமிழ்த் திரையுலகுக்கு புதுத் தெம்பு.. கமல்ஹாசனின் ரியல் Thuglife
கமல்ஹாசனை எப்படி மன்னிப்பு கேட்கச் சொல்லலாம்.. தக்லைபுக்கு தடை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி
காவிரி நதிநீர் பற்றி பேச பொம்மை முதல்வருக்கு துளியும் அருகதை இல்லை: எடப்பாடி பழனிச்சாமி!
வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.840 குறைவு!
சிறுவன் கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்
4 ராசிகளில் நீங்களும் ஒருவரா?..2025ல் பெரிய கோடீஸ்வரரா ஆய்ருவீங்களாம்ய்யா..பாபா வங்காவே சொல்லிட்டாரு
{{comments.comment}}