ராகுல் காந்திக்கு எதிராக.. காங்கிரஸ் கட்சிக்குள் சதி.. சொல்கிறார் பாஜக எம்பி!

Mar 31, 2023,11:15 AM IST
பெங்களூரு: ராகுல் காந்திக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்குள் சதி நடந்து வருவதாக கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. லஹர் சிங் சிரோயா கூறியஉள்ளார்.

ராகுல் காந்தியை பலவீனமாக்கவும், அவரை ஏமாற்றி தவறான திசைக்குத் திருப்பும் முயற்சிகள் நடப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.  ராகுல்காந்தியின் ஆலோசகர்கள் உண்மையில் அவருக்கு நல்ல ஆலோசனைகள் தருவதில்லை. மாறாக, அவருக்கு எதிராகவே அவர்கள் செயல்படுகிறார்கள். ஆனால் இதை ராகுல் காந்தி உணராமல் இருப்பதாகவும் சிரோயா கூறியுள்ளார்.



இதுகுறித்து சிரோயா கூறுகையில், ராகுல் காந்திக்கு எதிராக பழிவாங்கும் உணர்வுடன் பாஜக செயல்படவில்லை. உண்மையில் ராகுல் காந்திக்கு எதிராக இருப்பது காங்கிரஸ் கட்சிதான். அவரது ஆலோசகர்கள்தான் அவருக்கு தவறான வழிகாட்டலை கொடுத்து வருகின்றனர்.  ராகுல் காந்தி நல்லவர்தான். ஆனால் அவரைச் சுற்றி இருப்பவர்கள் தவறான பாதையில் அவரை அழைத்துச் செல்கின்றனர்.

நாங்கள் ராகுல் காந்திக்கு எதிராக ஆக்ரோஷமாக இருப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். அது உண்மை இல்லை. அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. அவர் மீண்டும் எம்.பியாகி நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும், விவாதங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்றுதான் நாங்கள் ஆசைப்படுகிறோம்.

இந்திரா காந்தி முன்பு தகுதி நீக்கம் செய்யப்பட்டபோது உடனடியாக அதை எதிர்த்து அவர் அலகாபாத் ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தார்.  கோர்ட்டும் அவரது தகுதி நீக்கத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது. பின்னர் சுப்ரீம் கோர்ட் வரை சென்றார் இந்திரா காந்தி. அவர் தொடர்ந்து எம்.பியாக இருந்தார். பின்னர் பிரதமரும் ஆனார். 

ஆனால் ராகுல்காந்தி அப்பீல் செய்வது குறித்து தவறாக வழி நடத்தப்படுகிறார். காங்கிரஸுக்குள் பல குழப்பங்கள் உள்ளன. அதைசயெல்லாம் சரி செய்ய காங்கிரஸ் முயலாமல் உள்ளது என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்