கர்நாடகத்தின் பிரவீன் சூத்.. அடுத்த சிபிஐ இயக்குநர் இவர்தான்.. 2 ஆண்டுகள் பதவி வகிப்பார்!

May 15, 2023,09:25 AM IST
டெல்லி: சிபிஐ இயக்குநராக கர்நாடக டிஜிபி பிரவீன் சூத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2 ஆண்டுகள் இந்த பொறுப்பை வகிப்பார்.

சிபிஐ இயக்குநராக தற்போது சுபோத் குமார் ஜெய்ஸ்வால் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் மே மாதம் 25ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய சிபிஐ இயக்குநராக பிரவீன் சூத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது கர்நாடக டிஜிபியாக இருக்கிறார். இவரைத்தான் சிபிஐ இயக்குநராக மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.



பிரவீன் சூத் மீது கர்நாடக காங்கிரஸ் ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கூறி வந்தது. கர்நாடக பாஜக அரசுக்கு சாதகமாக இவர் நடந்து கொள்கிறார். பல்வேறு பிரச்சினைகளிலிருந்து பாஜக அரசை இவர் காப்பாற்றி வருகிறார். தவறுகளுக்குத் துணை போகிறார். காங்கிரஸார் மீது வேண்டும் என்றே பொய் வழக்குகளைப் போடுகிறார். இவரைக் கைது செய்ய வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பகிரங்கமாகவே குற்றம் சாட்டி வந்தார். இந்த நிலையில் தற்போது கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரவீன் சூத் டெல்லிக்கு இடம் பெயரப் போகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் செளத்ரி ஆகியோர் அடங்கிய உயர் மட்டக் குழு, புதிய சிபிஐ இயக்குநர் தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்தியது. அதில் பிரவீன் சூத் பெயர் இறுதி செய்யப்பட்டது.

நாட்டின் 2வது மூத்த ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கிறார் பிரவீன் சூத். 1986ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான இவர் 2 ஆண்டுகளுக்கு சிபிஐ இயக்குநராக பதவி வகிப்பார். ஆனால் மத்தியஅரசு நினைத்தால் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!

news

பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!

news

வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

news

மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!

news

திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!

news

ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!

news

Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!

news

சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!

news

Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்