- ஸ்வர்ணலட்சுமி
திருக்கார்த்திகை தீபத் திருநாளுக்கு பல சிறப்புகள் உண்டு. சிவ பெருமான், ஜோதி வடிவமாக காட்சி அளித்த நாள் மட்டுமல்ல, பார்வதி தேவியின் கடும் தவத்தை ஏற்று, அவருக்கு தன்னுடைய உடலில் சரி பாதியை சிவ பெருமான் அளித்து, அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளித்ததும் இந்த கார்த்திகை தீபத் திருநாளில் தான். கிருத்திகை நட்சத்திரமும், பெளர்ணமியும் இணைந்த வரும் இந்த நாளில் சிவ பெருமானையும், முருகப் பெருமானையும் சேர்த்து வழிபடுவதால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்ட போது அதனை தீர்த்து வைப்பதற்காக அடிமுடி காண முடியாத வண்ணம் ஜோதி பிளம்பாக ஈசன் காட்சி அளித்த திருநாளையே கார்த்திகை தீபத் திருநாளாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். இந்த நன்னாளில் வீடுகளில் நாம் 27 தீபங்கள் ஏற்றி, இறைவனை ஜோதி வடிவமாக வழிபாடு செய்வது வழக்கம். அவரவர் வசதிக்கு ஏற்ப தீபங்கள் ஏற்றி வழிபடலாம்.
இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருநாள் டிசம்பர் 13ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. பொதுவாக வருடந்தோறும் கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரமும், பெளர்ணமியும் சேர்ந்து வரும் நாளில் தான் திருக்கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கிருத்திகை நட்சத்திரம் டிசம்பர் 13ம் தேதியும், பெளர்ணமி டிசம்பர் 15ம் தேதியும் வருகிறது. அதனால் கிருத்திகை நட்சத்திரம் வரும் நாள் என்ற அடிப்படையில் டிசம்பர் 13ம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்பட உள்ளது.
கார்த்திகை விரதம் :

கார்த்திகை தீபத்திருநாளன்று விரதம் இருப்பவர்கள் முழு நாளும் உணவு சாப்பிடாமல் விரதம் இருக்க முடியாவிட்டால் பால், பழம், நிறைய தண்ணீர் ஆகியவற்றை சாப்பிட்டு விரதம் இருக்கலாம். அவரவர் உடல்நிலையைப் பொறுத்து விரதம் இருக்கலாம்.
எப்போது, எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்?
1. திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையார், அர்த்தநாரீஸ்வரராக வருடத்திற்கு ஒருமுறை காட்சி தருவார். வெறும் 3 நிமிடம் தான் அந்தக்காட்சியை காண முடியும். அவர் காட்சி கொடுத்ததும், மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். அந்த காட்சியை தரிசித்து விட்டு தான் நாம் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும்.
2. மாலை 5.30 மணிக்கு முன்பாக விளக்குகளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து, பஞ்சு திரி போட்டு, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். திருவண்ணாமலையில் மலை மீது தீபம் ஏற்றியதும் அதை தொலைக்காட்சியில் பார்த்து விட்டு, மாலை 6 மணிக்கு பிறகு வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும்.
3. அண்ணாமலையாருக்கு அரோகரா என சொல்லி முதலில் வீட்டின் வாலில் 2 தீபம் ஏற்றி விட்டு, பிறகு பூஜை அறையில் விளக்குகள் ஏற்றி விட்டு, அதன் பிறகு வீட்டின் மற்ற இடங்களில் விளக்கேற்ற வேண்டும்.
4. வீட்டின் ஹாலில் குத்துவிளக்கு ஏற்றி, அதனைச் சுற்றி மலர்களால் அலங்கரித்து வைப்பது சிறப்பு. சமையல் அறையில் 2 தீபம், பின்புறம் 2 தீபம், படிகட்டுகளில் தீபங்கள் ஏற்ற வேண்டும். மொட்டை மாடி, பால்கனி என அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்ற வேண்டும்.
5. குழந்தைகள் வீட்டில் இருந்தால் ஓடி விளையாடுவார்கள். அவர்களை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}