- கவி. கலை
புத்தியினால் உட்கொண்டு
அகத்தினுள் நுழைந்ததால்
புத்தகம் ஆனாயோ?
உன்னுள் தான்
எத்தனை பூகம்பங்கள்?

எத்துனை புதுமைகள்
உன்னை கையில் ஏந்தினால்
என்னை விண்ணில் பறக்க வைக்கிறாய்.
உன்னை தொட்டு இரசித்தால்
என்னை சிகரம் தொடவைக்கிறாய்
உன்னை ஓரம் கட்டினால்
என்னை அறியாமையில் தள்ளுகிறாய்.
முதுமையின் துணையே !
தனிமையின் சுகமே.!
உனக்கு என் மென்மையான புரட்டல்
வலிக்கிறதா ?
எனக்கு வலிக்கிறது பக்கம் முடிகிறதே என்று.
(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)
Rathi's Kitchen: நாக்கு சப்புக் கொட்டி சாப்பிட வைக்கும்.. நார்ச் சத்து மிகுந்த துவையல்!
கனவுகள் மெய்ப்படும்!
Wonder Words: ஏன்.. எப்படி .. எதற்கு?.. விந்தையான வார்த்தைகள்!
பலவண்ணம்!
எதிர்பாராமல் கிடைத்த உதவிக்கு என்றுமே கடமைப்படு!
Thangalakshmi Short Story: உண்மை என்பது இவ்வுலகில் இல்லை
காரைக்குடியில் மக்கள் கூட்டத்திற்கு நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்...ஸ்தம்பித்த சாலைகள்
இணையத்தில் கசிந்த விஜய்யின் 'ஜனநாயகன்' சீன்ஸ்...ரசிகர்கள் கொதிப்பு
ஜனநாயகன் திரைப்படத்திற்காக முதல் ஆளாக குரல் கொடுத்த சிவகார்த்திகேயன்
{{comments.comment}}