- கவி. கலை
புத்தியினால் உட்கொண்டு
அகத்தினுள் நுழைந்ததால்
புத்தகம் ஆனாயோ?
உன்னுள் தான்
எத்தனை பூகம்பங்கள்?

எத்துனை புதுமைகள்
உன்னை கையில் ஏந்தினால்
என்னை விண்ணில் பறக்க வைக்கிறாய்.
உன்னை தொட்டு இரசித்தால்
என்னை சிகரம் தொடவைக்கிறாய்
உன்னை ஓரம் கட்டினால்
என்னை அறியாமையில் தள்ளுகிறாய்.
முதுமையின் துணையே !
தனிமையின் சுகமே.!
உனக்கு என் மென்மையான புரட்டல்
வலிக்கிறதா ?
எனக்கு வலிக்கிறது பக்கம் முடிகிறதே என்று.
(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)
Gpay Pocket Money: ஜிபே அறிமுகப்படுத்தியுள்ள பாக்கெட் மணி.. இது ஸ்கேம் அல்ல.. சூப்பரான ஸ்கீம்!
Rathi's Kitchen: மறைந்தும் மறந்தும் போன பாரம்பரிய சத்தான சிறுபயறு குழம்பு.....!
மற்றவர்களுக்கு இது தேர்தல், நமக்கு இது எமோஷன் - நெல்லையில் அனல் பறக்கப் பேசிய விஜய்
உச்சத்தின் எச்சம்!
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவுகளுக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை
Sa No to Drugs: போதைக்கு நோ செல்லுங்க... இளைஞர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அட்வைஸ்
நெல்லை, தூத்துக்குடியில் விஜய் ரோடுஷோ... தொண்டர்களால் தொடரும் விபத்துக்களால் பரபரப்பு
பேஷனை நம்பி நடந்த கால்கள்.. இன்று வெற்றியின் நம்பிக்கையான அதிசயம்!
சிந்தனைச் சிதறல்.. பிரசவ வலி பெண்களுக்கு.. பிரிவின் வலியோ ஆணுக்கும்!
{{comments.comment}}