- கவிதா அறிவழகன்
தூணாய் நின்றேன், கல்லாய் நிலைத்தேன்,
மதில் சுவராயும் இருந்தேன்,
வீசும் புயலிலும், காற்றிலும் வீழாது நின்றேன்,
நீண்டு வளைந்து செல்லும் கங்கையும் தன் பயணத்தின் இறுதியில்,
அமைதி கொள்ளும் ஒரு புகலிடத்தைத் தேடுகின்றாள்.
ஒளியின் நிழலை நோக்கி என் சிரசைச் சாய்க்கின்றேன்,
நடுநிசியில் எனக்காய் காத்திருக்கும் அந்தத் தோளில்,
மண்ணும் களிமண்ணும் சார்ந்த உயிரல்ல அவர்,
என்றும் பிரியாத தூய ஆவியானவர்.

பயணம் என் ஆண்டுகளையும் பெருமையையும் விழுங்கியது,
இருப்பினும் ரகசியங்கள்
உறங்கும் இடத்தைச் சேரவில்லை,
ஈரம் காயாத மை படிந்த அந்தப் பக்கங்களில்,
நான் மறக்க இயலாத அந்தத் தோள் இன்றும் உளது.
ஆத்துமாவே! அமைதி கொள், கடன்கள் அனைத்தும் தீர்ந்தது,
கவிதைப் பூஞ்சோலையின் குளிர் நிழலில் இளைப்பாறு.
தூயவர் மேல் சாய்ந்துவிடு, உலகம் கடந்து போகட்டும்,
விண்ணாளும் மன்னவனின் கரம் நீ பிடித்துக்கொண்டாய், அல்லவா!
(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)
Women's Day: மகளிருக்கு வாக்குறுதிகள்.. நாளை மாமல்லபுரத்தில் அறிவிக்கிறார் விஜய்.. தவெக தகவல்
வாக்கு சதவீதத்தை காட்டி அழுத்தம் தர மாட்டோம்: நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்
கூட்டணி வெற்றிக்காக தியாகம் செய்ய காங்கிரஸ் தயார்: மாணிக்கம் தாகூர் பல்டி
ராஜ்யசபா தேர்தல் 2026.. திமுக, அதிமுக, காங்., பாமக, தேமுதிக வேட்பு மனுக்கள் ஏற்பு
ஓபிஎஸ் போடி தொகுதியில் போட்டி?...விருப்பமனு அளித்த மகன் ரவீந்திரநாத்
தமிழக கவர்னர் ஆர் .என். ரவியை அதிரடியாக மாற்றியதற்கு இது தான் காரணமா?
திமுக கூட்டணியில் கமல் கட்சிக்கு எத்தனை சீட்? வெளியான பரபரப்பு அப்டேட்
துபாயில் ஏவுகணை தாக்குதல் ...மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தல்
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் ரிசல்ட் ...இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்து மதுரை பெண் சாதனை
{{comments.comment}}