- கவிதா அறிவழகன்
தூணாய் நின்றேன், கல்லாய் நிலைத்தேன்,
மதில் சுவராயும் இருந்தேன்,
வீசும் புயலிலும், காற்றிலும் வீழாது நின்றேன்,
நீண்டு வளைந்து செல்லும் கங்கையும் தன் பயணத்தின் இறுதியில்,
அமைதி கொள்ளும் ஒரு புகலிடத்தைத் தேடுகின்றாள்.
ஒளியின் நிழலை நோக்கி என் சிரசைச் சாய்க்கின்றேன்,
நடுநிசியில் எனக்காய் காத்திருக்கும் அந்தத் தோளில்,
மண்ணும் களிமண்ணும் சார்ந்த உயிரல்ல அவர்,
என்றும் பிரியாத தூய ஆவியானவர்.

பயணம் என் ஆண்டுகளையும் பெருமையையும் விழுங்கியது,
இருப்பினும் ரகசியங்கள்
உறங்கும் இடத்தைச் சேரவில்லை,
ஈரம் காயாத மை படிந்த அந்தப் பக்கங்களில்,
நான் மறக்க இயலாத அந்தத் தோள் இன்றும் உளது.
ஆத்துமாவே! அமைதி கொள், கடன்கள் அனைத்தும் தீர்ந்தது,
கவிதைப் பூஞ்சோலையின் குளிர் நிழலில் இளைப்பாறு.
தூயவர் மேல் சாய்ந்துவிடு, உலகம் கடந்து போகட்டும்,
விண்ணாளும் மன்னவனின் கரம் நீ பிடித்துக்கொண்டாய், அல்லவா!
(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)
விஜய்யின் திடீர் திருச்செந்தூர் விசிட்...யாருப்பா அந்த ஜோசியர்?
துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரின் பெரிய வேன் முன் செல்ல.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 3)
சமையல் துணுக்குகள்: ஹோட்டல் ஸ்டைல் பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசாலா!
Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. சிவப்பு மை கொடுத்த சிகரம்!
மனத்தின் மடை திறந்ததே!
Trust is based on the actions .. செயல்களில்தானே எல்லாமே!
Tireless Days .. சத்தமில்லாமல் வரும் விடியல் எனும் தோழன்!
Right people will stay to figure it out with you
சிந்தனைச் சிதறல். . உணவும் ஓய்வுமே உழைப்பிற்கான ஆற்றல் மூலம்!
{{comments.comment}}