கேரளா குண்டுவெடிப்பு.. தலைநகர் டெல்லி, மும்பையில் உச்சகட்ட பாதுகாப்பு

Oct 29, 2023,03:59 PM IST

டெல்லி : கேரளா வழிபாட்டு தலத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 


கேரளாவின் எர்ணாகுளத்தில் இன்று காலை வழிபாட்டு தலத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்தது. மூன்று முறை குண்டுவெடித்ததை போலீசார் உறுதி செய்துள்ளனர். குண்டுவெடிப்பிற்கு காரணமான குற்றவாளிகளை தேடும் பணி தீரவிமாக நடந்து வருகிறது. குண்டு வெடிப்பு குறித்த விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதவையடுத்து டில்லி மற்றும் மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 


கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். பண்டிகை காலம், கிரிக்கெட் போட்டிகள் மற்றும் கேரள குண்டுவெடிப்பு போன்ற காரணங்களால் உச்சகட்ட உஷார் நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக மும்பை போலீசாரும் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் போர் காரணமாக ஏற்கனவே பல இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 




டெல்லி சிறப்பு காவல் படையினரும் உளவுத்துறையை தொடர்ந்து கொண்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். 


கேரளாவில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 36 பேர் காயமடைந்துள்ளனர். அக்டோபர் 27 ம் தேதி துவங்கி 3 நாட்களாக இந்த பிராராத்தனை கூட்டம் நடந்து வந்துள்ளது. கூட்டத்தின் கடைசி நாளான இன்று, பிரார்த்தனை துவங்கிய சிறிது நேரத்திலேயே குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்