கேரளாவில் பயங்கர விபத்து : 9 பெண்கள் பலி

Aug 25, 2023,08:46 PM IST

கோழிக்கோடு : கேரளாவில் ஜீப் கவிழ்ந்து தேயிலை தோட்டத் தொழிலாளர்களான 9 பெண்கள் பலியாகி உள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.


கேரளாவின் வயநாது மாவட்டம் தாளப்புழாவில் உள்ள கன்னோத் மலைப்பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் வேலை செய்து வரும் பணியாளர்கள், வேலை முடித்து ஜீப்பில் வீடு திரும்பி உள்ளனர். இந்த ஜீப் மானந்தவாடி என்று பகுதியில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் ஜீப் மொத்தமாக நொறுங்கி உருக்குலைந்து போனது.


மாலை 04.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 9 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மானந்தவாடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிக்கப்பட்டுள்ளது. விபத்திற்குள்ளான ஜீப்பில் டிரைவர் உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்துள்ளனர். 


உயிரிழந்த பெண்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த தமிழ் பெண்களின் குடும்பத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பாமகவில் எனக்கே அதிகாரம்.... என்னை சந்தித்த நிர்வாகிகளே தேர்தலில் போட்டியிடுவார்கள்: டாக்டர் ராமதாஸ்

news

TVK VIjay Tour: விஜய்யின் அரசியல் சூறாவளி சுற்றுப்பயணம்...ஆகஸ்ட் 15ல் துவக்கம்?

news

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

news

தொடர் கனமழை... வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு!

news

ஆனி மாத ஆசாட அமாவாசை.. மிகச் சிறப்பானது.. மிகவும் முக்கியமானதும் கூட!

news

மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து விமர்சனம்.. ஆ ராசாவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

news

ரயில் கட்டண உயர்வு செய்தி.. மக்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

Axiom4: விண்வெளியில் புது வரலாறு எழுதும் இந்தியா.. ISS நிலையத்திற்குப் பயணமானார் சுபான்ஷு சுக்லா

news

மூன்றாவது நாளாக இன்றும் குறைந்தது தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்