கோழிக்கோடு : கேரளாவில் ஜீப் கவிழ்ந்து தேயிலை தோட்டத் தொழிலாளர்களான 9 பெண்கள் பலியாகி உள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கேரளாவின் வயநாது மாவட்டம் தாளப்புழாவில் உள்ள கன்னோத் மலைப்பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் வேலை செய்து வரும் பணியாளர்கள், வேலை முடித்து ஜீப்பில் வீடு திரும்பி உள்ளனர். இந்த ஜீப் மானந்தவாடி என்று பகுதியில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் ஜீப் மொத்தமாக நொறுங்கி உருக்குலைந்து போனது.
மாலை 04.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 9 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மானந்தவாடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிக்கப்பட்டுள்ளது. விபத்திற்குள்ளான ஜீப்பில் டிரைவர் உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்துள்ளனர்.
உயிரிழந்த பெண்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த தமிழ் பெண்களின் குடும்பத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!
இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு
நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்வி... வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியீடு!
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!
மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!
வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!
{{comments.comment}}