கோழிக்கோடு : கேரளாவில் ஜீப் கவிழ்ந்து தேயிலை தோட்டத் தொழிலாளர்களான 9 பெண்கள் பலியாகி உள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கேரளாவின் வயநாது மாவட்டம் தாளப்புழாவில் உள்ள கன்னோத் மலைப்பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் வேலை செய்து வரும் பணியாளர்கள், வேலை முடித்து ஜீப்பில் வீடு திரும்பி உள்ளனர். இந்த ஜீப் மானந்தவாடி என்று பகுதியில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் ஜீப் மொத்தமாக நொறுங்கி உருக்குலைந்து போனது.
மாலை 04.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 9 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மானந்தவாடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிக்கப்பட்டுள்ளது. விபத்திற்குள்ளான ஜீப்பில் டிரைவர் உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்துள்ளனர்.
உயிரிழந்த பெண்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த தமிழ் பெண்களின் குடும்பத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி: யார் யாருக்கு எத்தனை சீட்.. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது!
கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடியா இருக்கே...மலேசியாவில் அரசியல் பேச விஜய்க்கு தடை!
புத்தகப் பிரியர்களின் கவனத்திற்கு.. 49-வது சென்னை புத்தகத் திருவிழா தேதி மாற்றம்!
சார்பு ஆய்வாளர் தேர்வில்... தமிழ் கேள்விகளை நீக்கியுள்ள திமுக அரசிற்கு கண்டனம்: அண்ணாமலை
மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... விஜய் மெரிட் ஸ்காலர்ஷிப் திட்டம்...பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்!
பொங்கல் பரிசுடன் ரூ.5000 வழங்க வேண்டும்...எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உதயநிதியை முதல்வராக்குவதே திமுக.,வின் முக்கிய நோக்கம்...நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
வி..யில் தொடங்கும் தொகுதியில் போட்டியிடுவாரா விஜய்??.. பரபரக்கும் புதிய தகவல்!
பெங்களூருவின் அழகிய கலைப் பொக்கிஷம்.. பனசங்கரி சிற்பப் பூங்கா
{{comments.comment}}