வயநாடு நிலச்சரிவு பகுதிகளை.. பார்வையிட வருகிறார்.. பிரதமர் நரேந்திர மோடி.. ராகுல் வருகை ரத்து

Jul 31, 2024,11:07 AM IST

வயநாடு:   வயநாடு நிலச்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் அப்பகுதிகளில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளை பார்வையிட வர இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.


தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரளாவில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. குறிப்பாக வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக நேற்று அதிகாலை பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கி தவித்தனர். இந்த நிலச்சரிவில் இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில், 151 பேர் உயிரிழந்து உள்ளனர். 


நிலச்சரிவால் ஏராளமானோர் தனது குடும்பங்களையும் உறவினர்களையும் பிரிந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இரவில் கண்மூடி தூங்கிய நிலையில் இயற்கையும் அதேபோலவே கண்மூடி மண்ணில் புதைத்த  அவல நிலையை எண்ணி கண்ணீர் கடலில் தவித்து வருகின்றனர் வயநாடு மக்கள். இதனால்‌  வயநாடு பகுதியே அழுகுரலால் விழி பிதுங்கி இருக்கிறது.  உயிருடன் மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் இச்சம்பவத்தை எண்ணி அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.




நிலச்சரிவில் சிக்கிய பலரை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து இரண்டாவது நாளாக போராடி வருகின்றனர்.  முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி வயநாட்டில் ஏற்பட்ட இந்த துயர சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிவாரணத் தொகையும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 நிவாரணத் தொகையும் வழங்குமாறு உத்தரவிட்டார். 


பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு கேரள முதல்வர் பிரனாயி விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி கேரளா செல்ல இருக்கிறார். அப்பகுதிகளில் இன்றும் மழை பெய்து வருவதால் வானிலை நிலவரம் சரியானதும் ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய இருக்கிறார். ஆனால் தற்போது அங்கு சீரான வானிலை நிலவாததால் பிரதமர் எப்போது கேரளா வருகிறார் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.


அதேபோல எதிர்க்கட்சித் தலைவரான, வயநாடு முன்னாள் எம்பி ராகுல் காந்தி நேற்று வயநாடு பகுதிகளை பார்வையிட கேரள வருவதாக அறிவித்திருந்தார். ஆனால் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக ராகுல் காந்தியின் பயணமும் ரத்து செய்யப்பட்டது. நிலைமை சரியானதும் விரைவில் செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்... உள்ளே வரப் போவது யார்.. அவர்களா? பரபரக்கும் அரசியல் களம்

news

தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி

news

2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?

news

அதிமுக - பாஜக வாக்கு வங்கியை பதம் பார்க்கிறாரா விஜய்.. சிவோட்டர் சர்வே சொல்வது என்ன?

news

தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

news

'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் புதிய மனு

news

இடைக்கால பட்ஜெட்: தமிழக அமைச்சரவை பிப்., 5ல் கூடுகிறது

news

பல ஆண்டுகளாக காங்கிரஸ் உடன் கூட்டணியில் உள்ளோம்..அக்கட்சியுடன் மோதல் போக்கு இல்லை:எம்பி கனிமொழி

news

தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.4,800 குறைவு

அதிகம் பார்க்கும் செய்திகள்