வயநாடு: வயநாடு நிலச்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் அப்பகுதிகளில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளை பார்வையிட வர இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரளாவில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. குறிப்பாக வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக நேற்று அதிகாலை பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கி தவித்தனர். இந்த நிலச்சரிவில் இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில், 151 பேர் உயிரிழந்து உள்ளனர்.
நிலச்சரிவால் ஏராளமானோர் தனது குடும்பங்களையும் உறவினர்களையும் பிரிந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இரவில் கண்மூடி தூங்கிய நிலையில் இயற்கையும் அதேபோலவே கண்மூடி மண்ணில் புதைத்த அவல நிலையை எண்ணி கண்ணீர் கடலில் தவித்து வருகின்றனர் வயநாடு மக்கள். இதனால் வயநாடு பகுதியே அழுகுரலால் விழி பிதுங்கி இருக்கிறது. உயிருடன் மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் இச்சம்பவத்தை எண்ணி அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கிய பலரை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து இரண்டாவது நாளாக போராடி வருகின்றனர். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி வயநாட்டில் ஏற்பட்ட இந்த துயர சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிவாரணத் தொகையும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 நிவாரணத் தொகையும் வழங்குமாறு உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு கேரள முதல்வர் பிரனாயி விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி கேரளா செல்ல இருக்கிறார். அப்பகுதிகளில் இன்றும் மழை பெய்து வருவதால் வானிலை நிலவரம் சரியானதும் ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய இருக்கிறார். ஆனால் தற்போது அங்கு சீரான வானிலை நிலவாததால் பிரதமர் எப்போது கேரளா வருகிறார் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
அதேபோல எதிர்க்கட்சித் தலைவரான, வயநாடு முன்னாள் எம்பி ராகுல் காந்தி நேற்று வயநாடு பகுதிகளை பார்வையிட கேரள வருவதாக அறிவித்திருந்தார். ஆனால் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக ராகுல் காந்தியின் பயணமும் ரத்து செய்யப்பட்டது. நிலைமை சரியானதும் விரைவில் செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}