திருநெல்வேலியில் கேரள மருத்துவக் கழிவு கொட்டிய லாரி பறிமுதல்.. டிரைவரும் கைது செய்யப்பட்டார்

Dec 21, 2024,05:02 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலியில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட செயலில் ஈடுபட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த லாரியின் டிரைவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


கேரள அரசு மருத்துவக் கழிவுகளை தமிழக எல்லையோர மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் கேரளாவிலிருந்து பல்வேறு மருத்துவமனை கழிவுகளையும் இங்கு கொண்டு வந்து கொட்டுகின்றனர். இது சமீப காலமாக எல்லைப் பகுதியில் பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது. தமிழ்நாட்டை குப்பைத் தொட்டி போல கேரளத்தினர் பயன்படுத்தும் செயல் அதிகரித்து வருகிறது. ஆனால் இதுவரை இந்த அட்டகாசத்தைத் தடுக்க எந்த தீவிரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




கேரளத்தினரின் இந்த அடாவடி செயலால்,  தமிழக எல்லைகளில் வசிக்கும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த கழிவுகளால் அந்தப் பகுதிகளில் சுகாதார சீர்கேடுகள்  அதிகரித்து வருகின்றன. நீர்நிலைகள், நிலம் போன்றவை பாதிக்கப்படுகிறது. குடிநீர் மாசடைகிறது. உடல் ரீதியான ஆரோக்கிய கேடுகளும் பரவும் அபாயமும் உள்ளன.


இந்த நிலையில் கேரள மாநில புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டு வந்து கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளுக்கு எதிராக சுத்தமல்லி காவல் நிலையத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது லாரியையும் பறிமுதல் செய்துள்ள அதிகாரிகள் அதன் டிரைவரையும் கைது செய்துள்ளனர்.


இதற்கிடையே, இந்நிலையில், கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகள் நெல்லை மாவட்டத்தில் கொண்டப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேரளா மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், திருவனந்தபுரம் மாநகராட்சி அதிகாரிகள் உள்பட 7 பேர் கொண்ட குழு நேற்று நெல்லை வந்து மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில்  ஆய்வு செய்தனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆலயம் தொழுவது சாலவும் நன்று.. அவ்வளவு நன்மைகள் உள்ளன கோவிலுக்கு செல்வதில்!

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

முதல் முறையாக.. சொன்ன நேரத்துக்கு முன்பே வந்து சேர்ந்த தவெக தலைவர் விஜய்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 09, 2025... இன்று வெற்றிகள் அதிகரிக்கும்

news

தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டில் இடம் பெற்ற ஒரு பெண்ணின் பெயர்.. யார் அவர்?

news

விழாக்கோலம் பூண்ட புதுச்சேரி.. சீக்கிரமே வந்து விஜய்.. பேச்சைக் கேட்க திரண்ட தவெக தொண்டர்கள்!

news

Movie review: வசூலை வாரிக் குவிக்கும் தேரே இஷ்க் மேய்ன்.. எப்படி இருக்கு படம்?

news

நொறுங்கத் தின்றவனுக்கு நூறு வயசு.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

ஓம்கார ஹரியே .. ஒம் ஒம்ஹரியே கோவிந்தஹரியே .. கோவர்த்தனம் சுமந்த ஹரி நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்