திருநெல்வேலி: திருநெல்வேலியில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட செயலில் ஈடுபட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த லாரியின் டிரைவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள அரசு மருத்துவக் கழிவுகளை தமிழக எல்லையோர மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் கேரளாவிலிருந்து பல்வேறு மருத்துவமனை கழிவுகளையும் இங்கு கொண்டு வந்து கொட்டுகின்றனர். இது சமீப காலமாக எல்லைப் பகுதியில் பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது. தமிழ்நாட்டை குப்பைத் தொட்டி போல கேரளத்தினர் பயன்படுத்தும் செயல் அதிகரித்து வருகிறது. ஆனால் இதுவரை இந்த அட்டகாசத்தைத் தடுக்க எந்த தீவிரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தினரின் இந்த அடாவடி செயலால், தமிழக எல்லைகளில் வசிக்கும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த கழிவுகளால் அந்தப் பகுதிகளில் சுகாதார சீர்கேடுகள் அதிகரித்து வருகின்றன. நீர்நிலைகள், நிலம் போன்றவை பாதிக்கப்படுகிறது. குடிநீர் மாசடைகிறது. உடல் ரீதியான ஆரோக்கிய கேடுகளும் பரவும் அபாயமும் உள்ளன.
இந்த நிலையில் கேரள மாநில புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டு வந்து கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளுக்கு எதிராக சுத்தமல்லி காவல் நிலையத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது லாரியையும் பறிமுதல் செய்துள்ள அதிகாரிகள் அதன் டிரைவரையும் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே, இந்நிலையில், கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகள் நெல்லை மாவட்டத்தில் கொண்டப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேரளா மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், திருவனந்தபுரம் மாநகராட்சி அதிகாரிகள் உள்பட 7 பேர் கொண்ட குழு நேற்று நெல்லை வந்து மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}