திருநெல்வேலி: திருநெல்வேலியில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட செயலில் ஈடுபட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த லாரியின் டிரைவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள அரசு மருத்துவக் கழிவுகளை தமிழக எல்லையோர மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் கேரளாவிலிருந்து பல்வேறு மருத்துவமனை கழிவுகளையும் இங்கு கொண்டு வந்து கொட்டுகின்றனர். இது சமீப காலமாக எல்லைப் பகுதியில் பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது. தமிழ்நாட்டை குப்பைத் தொட்டி போல கேரளத்தினர் பயன்படுத்தும் செயல் அதிகரித்து வருகிறது. ஆனால் இதுவரை இந்த அட்டகாசத்தைத் தடுக்க எந்த தீவிரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தினரின் இந்த அடாவடி செயலால், தமிழக எல்லைகளில் வசிக்கும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த கழிவுகளால் அந்தப் பகுதிகளில் சுகாதார சீர்கேடுகள் அதிகரித்து வருகின்றன. நீர்நிலைகள், நிலம் போன்றவை பாதிக்கப்படுகிறது. குடிநீர் மாசடைகிறது. உடல் ரீதியான ஆரோக்கிய கேடுகளும் பரவும் அபாயமும் உள்ளன.
இந்த நிலையில் கேரள மாநில புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டு வந்து கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளுக்கு எதிராக சுத்தமல்லி காவல் நிலையத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது லாரியையும் பறிமுதல் செய்துள்ள அதிகாரிகள் அதன் டிரைவரையும் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே, இந்நிலையில், கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகள் நெல்லை மாவட்டத்தில் கொண்டப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேரளா மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், திருவனந்தபுரம் மாநகராட்சி அதிகாரிகள் உள்பட 7 பேர் கொண்ட குழு நேற்று நெல்லை வந்து மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}