இடாநகர்: சீனாவுடனான எல்லைப் புற மாநிலமான அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் புதிதாக ஒரு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது அந்த மாநிலத்தின் 26வது மாவட்டமாகும்.
கீழ் சுபான்ஸ்ரீ மாவட்டத்தைப் பிரித்து புதிதாக கெயி பன்யார் மாவட்டம் உருவாக்கப்பட்டது. அப்பகுதியில் பெரும்பான்மையாக வசித்து வரும் நியிஷி இன மக்கள் இந்த புதிய மாவட்டத்தை நீண்ட காலமாக கோரி வந்தனர். இந்த கோரிக்கையை தற்போது நிறைவேற்றியுள்ளது அருணாச்சல் பிரதேச மாநில அரசு.
புதிய கெயி பன்யார் மாவட்டத்தின் தலைநகராக கபின் சாம் சார்த் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாவட்டம் பிறந்துள்ளதன் காரணமாக இப்பிராந்தியத்தின் வளர்ச்சியும், முன்னேற்றமும் இனி பிரகாசமாக இருக்கும் என்று முதல்வர் பெமா கந்து கூறியுள்ளார்.

அடுத்த வாரம் மேலும் ஒரு மாவட்டம் இங்கு உருவாக்கப்படவுள்ளது. அந்த மாவட்டத்தின் பெயர் பிகாம். இது அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் 27வது மாவட்டமாக இருக்கும்.
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!
ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?
{{comments.comment}}