இடாநகர்: சீனாவுடனான எல்லைப் புற மாநிலமான அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் புதிதாக ஒரு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது அந்த மாநிலத்தின் 26வது மாவட்டமாகும்.
கீழ் சுபான்ஸ்ரீ மாவட்டத்தைப் பிரித்து புதிதாக கெயி பன்யார் மாவட்டம் உருவாக்கப்பட்டது. அப்பகுதியில் பெரும்பான்மையாக வசித்து வரும் நியிஷி இன மக்கள் இந்த புதிய மாவட்டத்தை நீண்ட காலமாக கோரி வந்தனர். இந்த கோரிக்கையை தற்போது நிறைவேற்றியுள்ளது அருணாச்சல் பிரதேச மாநில அரசு.
புதிய கெயி பன்யார் மாவட்டத்தின் தலைநகராக கபின் சாம் சார்த் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாவட்டம் பிறந்துள்ளதன் காரணமாக இப்பிராந்தியத்தின் வளர்ச்சியும், முன்னேற்றமும் இனி பிரகாசமாக இருக்கும் என்று முதல்வர் பெமா கந்து கூறியுள்ளார்.

அடுத்த வாரம் மேலும் ஒரு மாவட்டம் இங்கு உருவாக்கப்படவுள்ளது. அந்த மாவட்டத்தின் பெயர் பிகாம். இது அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் 27வது மாவட்டமாக இருக்கும்.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}