பொண்ணாட கிளாஸ்மேட்டையே காதலித்து கணவராக்கிய பிரிஜிட்.. இமானுவேல் மேக்ரானின் கதை!

May 27, 2025,04:47 PM IST

பாரீஸ்: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கன்னத்தில் பளார் விட்டார் அவரது மனைவி பிரிஜிட் என்ற செய்திதான் தற்போது பரபரப்பாகி கொண்டுள்ளது. சர்ச்சையில் சிக்குவது பிரிஜிட்டுக்குப் புதிதில்லை. சர்ச்சைகளுடன் வாழ்வது மேக்ரானுக்கும் பழகிய ஒன்றுதான்.


இமானுவேல் மேக்ரான் - பிரிஜிட் திருமண வாழ்க்கையே சர்ச்சையில் பிறந்ததுதான். அப்போது பிரிஜிட்டுக்கு 39 வயது இருக்கும் அவர் அமீன்ஸ் நகரில் உள்ள ஒரு கத்தோலிக்க பள்ளியில் ஆசிரியையாக இருந்து வந்தார். அவரது வகுப்பில் படித்து வந்த மாணவர்தான் மேக்ரான். அப்போது அவருக்கு வயது 15. இருவருக்கும் அப்போதே காதல் மலர்ந்தது. இதே வகுப்பில்தான் பிரிஜிட்டின் மகளும் படித்து வந்துள்ளா்.


அதாவது மகளுடைய கிளாஸ்மேட்டைத்தான் பிரிஜிட் காதலித்துள்ளார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தன்னை விட 24 வயது இளையவரான மேக்ரானைத் திருமணம் செய்து கொண்ட பிரிஜிட் அவ்வப்போது சர்ச்சையிலும் சிக்கி வந்தார்.  பிரிஜிட்டுக்கு முதல் திருமணம் மூலம் 3 குழந்தைகள் உள்ளனர். அதில் மூத்த மகள்தான், மேக்ரானின் கிளாஸ்மேட் ஆவார். 




முதல் கணவருடன் குடும்பம் நடத்திக் கொண்டிருந்த சமயத்தில்தான் மேக்ரானுடன் காதல் கொண்டார். இருவரும் சேர்ந்து ஒரு முறை சன் பாத் எடுத்துக் கொண்டிருந்தபோது அதை பிரிஜிட்டின் முதல் கணவரான ஆஸியர் பார்த்து விட்டார். அதன் பிறகு பிரிஜிட்டும், ஆஸியரும் விவாகரத்து செய்து விட்டனர்.


மேக்ரான் எப்போதுமே தன்னை விட வயது அதிகமானவர்களுடன்தான் நெருக்கமாக பழகுவார் பேசுவாராம். இதுகுறித்து அவரது ஆசிரியரான டேணியல் லிலேயு கூறுகையில் 15 வயது என்றாலும் கூட 25 வயதுக்காரரின் பக்குவத்துடன் இருப்பார் மேக்ரான். சக மாணவர்களை விட ஆசிரியர்கள், ஆசிரியைகளுடன்தான் அவர் அதிகமாக பேசுவார். நேரம் செலவழிப்பார். நிறைய விவாதிப்பார் என்றார்.


2007ம் ஆண்டுதான் பிரிஜிட் - மேக்ரான் திருமணம் நடந்தது. 2014ம் ஆண்டு மேக்ரான் நிதியமைச்சராக பதவியேற்றதும், பிரிஜிட் தனது வேலையை விட்டு விட்டு கணவருக்குத் துணையாக மாறினார்.  இடையில் ஒரு ரேடியோ நிறுவன தலைமைப் பெண்மணியுடன் மேக்ரானுக்கு காதல் இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை மேக்ரான் திட்டவட்டமாக மறுத்திருந்தார். இருப்பினும் இந்த செய்திகள் பிரிஜிட்டை புண்படுத்தி விட்டன. அவர் அப்செட் ஆனார். இந்த களேபரத்துக்கு மத்தியில்தான் மேக்ரான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.


அதிபரானதும் இந்த பரபரப்புகள் அடங்கிப் போயின. இந்த நிலையில்தான் தற்போது மேக்ரானை பிரிஜிட் தாக்கி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை மேக்ரான் திட்டவட்டமாக மறுத்து விளக்கம் அளித்துள்ளார். ஆனால் நெருப்பில்லாமல் புகையாது என்று பிரான்ஸில் பேசிக் கொள்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!

news

திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்

news

ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!

news

சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)

news

ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)

news

கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க

news

வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!

news

தாயன்பு !

news

All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்