- சிவ.ஆ. மலர்விழி ராஜா
குமரேசனாய் பிறந்து.,...
இமயம் முதல்
குமரி வரை.....,.
இந்திய தேசம்
போற்றிய ......
திருமகனாம்
திருப்பூர் குமரன்......
வறுமையின்
பிடியில் வாழ்ந்த மகன்.....
தமிழ்த்தாய்
ஈன்றெடுத்த......
செங்கோல் நாயகன்...,.!

ஈடில்லா தமிழ்
மண்ணின் ....
மாசற்ற மைந்தன்.....
இந்திய தேசத்தின்
காவிய தலைவன்......
உயிரினும் மேலான
தேசிய கொடியை.....
உயிர் போன பின்னும்....
உயர்த்திப் பிடித்த மாவீரன்.......
அடி பல பட்டாலும்
வலிகள் தாங்கி ...
இடிதாங்கி
போல்......
வந்தே மாதரம் ....!
என்ற பொன்மொழியை உதிர்த்து.....
உயிர்த்தியாகம் செய்து....
நம் இதயம் தொட்ட
இணையற்ற வீரன்.,.....
கொடிபிடித்து உயிர்
விடுத்த .....
கொடிகாத்த குமரன்......
இந்நாளில் அவரது மலர்பாதம்
பணிந்து
வணங்கிடுவோம்.....
வாழ்க பாரதம்.....!
வளர்க செந்தமிழ்......!
வந்தே மாதரம்......!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}