கிருஷ்ண ஜெயந்தி 2023 : கஷ்டங்கள் தீர்க்கும் கோகுலாஷ்டமி நன்னாள்

Sep 06, 2023,10:31 AM IST

சென்னை: இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று கிருஷ்ண ஜெயந்தி. மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த அவதாரம், கிருஷ்ண அவதாரம் ஆகும். இது பெருமாளின் எட்டாவது அவதாரம் ஆகும். 

ஆவணி மாதம் தேய்பிறையில் வரும் எட்டாவது திதியான அஷ்டமி நாளில், தேவகியின் எட்டாவது பிள்ளையாக, எட்டாவது அவதாரமான கிருஷ்ண அவதாரத்தை நிகழ்த்தினார் மகாவிஷ்ணு. சாதாரண மனிதனாக பிறப்பெடுத்து, செடி, கொடி, ஆடு, மாடு துவங்கி மனிதர்கள் வரை அனைவருக்கும் தனது அருளையும், அன்பையும் சமமாக பரமாத்மா அளித்த அவதாரம் என்பதால் கிருஷ்ண அவதாரம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.





கிருஷ்ண ஜெயந்தி தேதியும், நேரமும் :

அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்து வரும் நாளே கிருஷ்ண ஜெயந்தி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 06 ம் தேதி இரவு 9.13 மணிக்கு தான் அஷ்டமி திதி துவங்குகிறது. ஆனால் மாலை 3.25 மணிக்கே ரோகிணி நட்சத்திரமும் துவங்கி விடுகிறது. அதே போல் செப்டம்பர் 07 ம் தேதி இரவு வரை அஷ்டமி திதி உள்ளது. இருந்தாலும் ரோகிணி நட்சத்திரமும் மாலை 4 மணி வரை மட்டுமே உள்ளது. இதனால் செப்டம்பர் 06, 07 ஆகிய இரண்டு நாட்களில் எந்த நாளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட வேண்டும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் முறை :




கிருஷ்ணர் அவதாரம் எடுத்தது நள்ளிரவு நேரத்தில் தான். அதனால் கிருஷ்ண ஜெயந்தி பூஜைகள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றை இரவு நேரத்திலேயே செய்ய வேண்டும். பொதுவாக வைணவர்கள் இரண்டு விதமான ஆகமங்களை கடைபிடிப்பதுண்டு. இதில் வைகாசன ஆகமத்தை பின்பற்றுபவர்கள், அஷ்டமி திதி துவங்கியதை அடிப்படையாக வைத்து இரவு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுவார்கள். பாஞ்சராத்திர ஆகமத்தை பின்பற்றுபவர்கள் அஷ்டமி திதியும், ரோகிணியும் சேர்ந்து வரும் மறுநாள் கோகுலாஷ்டமியாக இந்நாளை கொண்டாடுவார்கள். இதனால் இதற்கு ஸ்ரீ ஜெயந்தி என்றும் பெயர்.

வீட்டில் வழிபடும் முறை :

வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுபவர்கள் செப்டம்பர் 6 ம் தேதி மாலை 6 மணிக்கு மேல், வீட்டில் குழுந்தை கிருஷ்ணரின் சிலை அல்லது படம் வைத்து, பூக்களால் அலங்கரிக்க வேண்டும். வீட்டில் வாசல் துவங்கி, பூஜை அழை வரை அரிசி மாவினால் குழந்தை கிருஷ்ணரின் பாதங்களை வரைய வேண்டும். பிறகு அவருக்கு பிடித்த பலகாரங்கள் முறுக்கு, சீடை, லட்டு என என்னவெல்லாம் வைக்க முடியுமோ அத்தனையும் வைத்து வழிபடலாம். முடியாதவர்கள் எளிமையாக அவல், பால் வைத்து வழிபடலாம். கண்ணனுக்கு விருப்பமான பால், நெய், தயிர், மோர், வெண்ணெய் ஆகியவற்றை வைத்து வழிபட வேண்டும்.

கண்ணனுக்குரிய மந்திரங்கள் :



விஷ்ணு சகஸ்ரநாமம் படித்து கண்ணனை வழிபடுவது சிறப்பு. தெரியாதவர்கள் "ஓம் கிருஷ்ணாய நமஹ", "ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே...ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே"   ஆகிய மந்திரங்களை சொல்லி வழிபடலாம். குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த நாளில் கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து உபவாசமாக விரதமிருந்து கண்ணனை வழிபட்டால் அடுத்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்திக்குள் நிச்சயம் குழந்தை பேறு கிடைக்கும்.

செப்டம்பர் 07 ம் தேதி கோகுலாஷ்டமி கொண்டாடுபவர்கள் காலையிலேயே கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். அன்று இரவு வரை அஷ்டமி திதி இருந்தாலும் மாலை 4 வரை மட்டுமே ரோகிணி நட்சத்திரம் உள்ளது. ரோகிணி நட்சத்திரம் முடிந்த பிறகு கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவது முறையல்ல.

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி

news

சந்தோஷம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்