கும்பகோணம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் குளத்திற்கு அடியில் இருக்கும் அத்தி வரதர் பற்றி அனைவருக்கும் தெரியும். கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீருக்குள் இருந்து 2019ம் ஆண்டு வெளியே எடுக்கப்பட்ட இவரை தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்தனர். ஆனால் அத்தி மரத்தால் செய்யப்பட்ட அத்தி வரதர் சிலை காஞ்சிபுரத்தில் மட்டுமல்ல, கோவில் நகரமான கும்பகோணத்திலும் உள்ளது என்பது பலரும் அறியாத ரகசியம்.
கும்பகோணத்தில் உள்ள மிக பழமையான கோவில்களில் வரதராஜ பெருமாள் கோவிலும் ஒன்று. 180 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் மூலவராக வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். கருவறைக்கு கிழக்கே இங்கு ஒரு பாதாள ரகசிய அறை உள்ளது.
இக்கோவிலின் மிகப்பெரிய அதிசயம் மற்றும் ரகசியம், இங்குள்ள பாதாள அறையில் வீற்றிருக்கும் அத்தி வரதர் ஆவார். காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி வரதர் குளத்திலிருந்து வெளியே எடுக்கப்படுவது போல, கும்பகோணத்தில் உள்ள அத்தி வரதர் சிலை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுக்கப்படும் என்பது பலரும் அறியாத தகவல்.

கோவிலின் உட்பிரகாரத்தில் ஒரு சிறிய சன்னதி போன்ற அமைப்பு உள்ளது. அதன் கீழே ஒரு ரகசிய பாதாள அறை அமைந்துள்ளது. அந்நியப் படையெடுப்புகளின் போது விக்கிரகங்களுக்குச் சேதம் ஏற்படாமல் காக்க, நம் முன்னோர்கள் மூலவர் சிலையை இந்தப் பாதாள அறையில் மறைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பாதாள அறைக்குள் அத்தி மரத்தினால் ஆன வரதராஜ பெருமாள் சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தைப் போல், இங்குள்ள அத்தி வரதர் எப்போதும் தண்ணீரிலோ அல்லது வெளியிலோ இருப்பதில்லை; மாறாக, ஒரு இருண்ட நிலவறையில் குடிகொண்டுள்ளார்.
பொதுவாக இந்தப் பாதாள அறை மூடப்பட்டே இருக்கும். இவரை தரிசனம் செய்ய யாரும் அனுமதிக்கப்படுவது கிடையாது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக இருகு்கும் இந்த அத்தி வரதர் ஒன்றரை அடி உயரம் கொண்டவர். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பாதாள அறையில் இருந்து இவர் வெளியே எடுக்கப்படுகிறார். இவரைத் தரிசிப்பது மிகுந்த புண்ணியமாகவும், தீராத வினைகளைத் தீர்க்கும் அருமருந்தாகவும் பக்தர்கள் கருதுகின்றனர்.
12 ஆண்டுகளுக்கு பிறகு பாதாள அறையில் இருந்து எடுக்கப்பட்டு, மார்ச் 1-ந் தேதி முதல் 10 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்யவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 1915-ஆம் ஆண்டுக்குப் பின் பல்வேறு காரணங்களால் இந்த சிலை வெளியே எடுத்து வைக்கப்படவில்லை. சுமார் 98 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2013-ஆம் ஆண்டு இந்த சிலை வெளியே எடுக்கப்பட்டு, பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் பாதாள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.மார்ச் 10ம் தேதி வரை காலை 08 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, மாலை 05 மணி முதல் இரவு 08.30 மணி வரை இந்த அத்தி வரதரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
பிப்ரவரி 28ம் தேதி என்ன நாள் தெரியுமா.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!
மனிதர்களுக்குத்தான் மன அழுத்தம்... வாஸ்தவம்தான்.. அது என்ன காற்றுக்கு அழுத்தம்?
என்னுடைய உயரம் எனக்குத் தெரியும். அந்த உயரத்தின் அடிப்படையில் நான் இருப்பேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் திருக்குடமுழக்கு நன்னீராட்டு பெருவிழா
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை உயர்வு... சவரனுக்கு ரூ.1,440 உயர்வு!
தலைநகர் சென்னையில்.. பெரம்பூரில் போட்டியிடுங்கள்... விஜய்க்கு தவெக நிர்வாகிகள் வேண்டுகோள்
நெருக்கடி நேரத்துல.. மண்டையைப் பிச்சுக்காதீங்க.. ஈஸியா முட்டைக் குழம்பு வச்சு அசத்துங்க..!
டி 20 உலகக் கோப்பை.. இந்தியாவை சிக்கல்ல கொண்டு வந்து நிறுத்திட்டீங்களேய்யா!
"நாளை உன் கண்கள் என்னைத்தான் தேடும்" .. (நீ மழை.. 4)
{{comments.comment}}